தீபாவளி 13-11-2012 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் நான்...

என்ன பண்ணச் சொல்றீங்க...? 
அல்லது தரிசு நிலம் பரிசு! 
(படைப்புக்கு ஒரு தலைப்புத்தான் வைக்கணுமா என்ன?)

1980கள் தொடங்கி, நான் எத்தனையோ கட்டுரை-கவிதைகளைத் தினமணி, ஜனசக்தி, செம்மலர், கணையாழி உள்ளிட்ட பல அச்சிதழ்களிலும், பதிவுகள், திண்ணை, கீற்று முதலான இணைய இதழ்களிலும் எழுதியிருக்கிறேன். இப்போதும் எழுதிவருகிறேன்.

கவிஞர் மீரா அவரது “அன்னம்“ பதிப்பகத்தின் வழியாக 1993இல் வெளியிட்ட எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பு அந்த ஆண்டின் கலைஇலக்கியப் பெருமன்றப்பரிசை வென்றதோடு, கடந்த ஆண்டுவரை -பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ தமிழிலக்கிய வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது.

“பாரதிதாசன் இணையம்“ நடததிய உலகளாவிய கவிதைப் போட்டியில் முதல்பரிசு தந்தார்கள். கவிஞர் பாலாவும் கவிஞர் மு.மேத்தாவும் சேர்ந்து புதுக்கோட்டை நகரில் எனக்கு “பாரதிதாசன் விருது“ தந்தார்கள்...
1989இல் “புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கப் பிரச்சாரத்திற்காக நான் எழுதிய “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி“ பாடல் மாநிலம் தாண்டியும் பல மொழிகளில் -எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமிகு ஷீலா ராணி அவர்களால் வெளிவந்து புகழ்தந்தது.

எல்லாம் சரி...
ஏன் இந்த சுய தம்பட்டம் என்கிறீர்களா?
சுய ஆற்றாமைதான்!
இவற்றையெல்லாம் விடவும் நான் சமீப காலமாக தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் திண்டுக்கல் திரு.ஐ.லியோனி அவர்களின் குழுவில் அணித்தலைவராகப் பேசுவதுதான் உலகம் முழுவதும் அறியப் பட்டிருக்கிறது!
எனவே நான் பட்டிமன்றப் பேச்சாளராகவே அறியப்பட்டுவிட்டேன்...

இதனால் நன்மை-விமர்சனம் இரண்டையும் எதிர்கொண்டு வருகிறேன்.
நண்பர்கள் -மின்சாரத் தேவதையின் அருள்பெற்ற இடங்களில் வாழ்வோர், நேரமும் மனமும் இருந்தால் பார்க்கலாம்.

வரும் தீபாவளி (13-11-2012) அன்று காலை 9-00மணிக்கு கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் முதல் பேச்சாளனாக நான் பேசியிருக்கிறேன்.

நண்பர்களையும் பார்க்கச்சொல்லி, குடும்பத்தினருடன் நீங்களும் பார்த்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசுவோர்க்கு தஞ்சாவுரில் தண்ணிபாயாத நிலம் பத்து நூறாயிரம் காணி தரிசாக -மன்னிக்கவும் பரிசாக- வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேனுங்கோவ்... - ---உங்கள் நா.முத்து நிலவன்.
Cell - +91 94431 93293


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக