கைக்குறிச்சி பாரதி கல்லூரியில் கவிதைப் பயிலரங்கம்

படம், செய்திக்கு நன்றி- நக்கீரன் இணைய இதழ்

பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவியர் முதலிரு படங்களில் உள்ளனர் அடுத்தடுத்து..
மேடையில் -இடமிருந்து வலமாக- கைக்குறிச்சி பாரதி கலை-அறிவியல் மகளிர் கலலூரி முதல்வர் ஜானகிசுவாமிநாதன், பேரா.மு.பா., பரிசுபெறும் மாணவியர்,
கவிஞர் ரமா.ராமநாதன், கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், நா.முத்துநிலவன்,
கவிஞர் சு.மதியழகன்,தமுஎச கிளைச்செயலர் கவிஞர் செ.சுவாதி ஆகியோர் உள்ளனர்
---------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர்  கல்லூரியில் தமுஎகச திருக்கோகர்ணம் கிளை ஒருநாள் கவிதைப் பயிலரங்கம் நடத்தியது.

நான் தொலைக்காட்சியில் பேசுவது தவறா? - வாசகர்கள் கருத்துச் சொல்லுங்கள்


கணையாழி இதழில் வெளிவந்த எனது கட்டுரையை எனது வலையின் முந்திய பதிவாக இட்டிருந்தேன் அது பற்றிய   நண்பர்களின் கருத்தில் ஒரு கருத்தை மட்டும் நான் வெளியிடவில்லை.

அவர் பெயர் திரு அருள்மொழி. ஊர் தெரியவில்லை.
 “சினிமா நடிகர்களைக் குறைசொல்வது இருக்கட்டும். உங்களைப் போன்ற தமிழ் வாத்தியார்கள் பட்டிமன்றம் என்னும் பெயரில் அடிக்கும் கூத்தை நிறுத்துங்கள். பிறகு சினிமா நடிகர்களைக் குறை சொல்லலாம்” என்று கருத்திட்டிருந்தார்.

“தீபம்”இலக்கிய இதழில் வெளிவந்த என் கவிதை



கவியுதிர் காலம்

அடே அப்பா!
எத்தனை கவிஞர்கள்
எத்தனை கவிதைகள்!
ஓ!
இந்த
இலையுதிர்காலத்தின்
இறுதியில்தான்
வசந்தம்
வரவிருக்கிறதோ!?!
--நா.முத்துநிலவன்

(நன்றி-
 தீபம் இலக்கிய மாத இதழ்
ஆசிரியர்-நா.பார்த்தசாரதி,
 டிசம்பர்-1983)
---------------------------------------

பொறுப்பற்ற சினிமாக்காரர்கள்





மற்ற நாடுகளெல்லாம் 
வரைபடத்தில் இருக்கின்றன 
தமிழ்நாடு மட்டும் 
திரைப்படத்தில் இருக்கிறது


என்று  சாடினார்  
கவிஞர் நெல்லை ஜெயந்தா 

பேராண்மை, சாட்டை, வழக்குஎண் 18/9, அண்மையில் வந்திருக்கும் தங்கமீன்கள் முதலான வெகுசில படங்களின் இயக்குநர்களைத் தவிர மற்ற “மாபெரும் நடிகர்களின்” படங்கள் எல்லாவற்றையும் பார்க்கிற வெளிநாட்டவரும், நம் அடுத்த தலைமுறையும் தற்போது தமிழகத்தில் வந்துகொண்டிருக்கும் மசாலாப் படங்களை மாபெரும் வெற்றிப் படங்களாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நமைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்று யோசிக்கவே வெட்கமாக இருக்கிறது.
            ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக் கூடத் தன் பொறுப்பை உணராத விஜயகாந்த்துக் கெல்லாம் “தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் ஆகிவிடலாம்”எனும் அசட்டுத் துணிச்சலைக் கொடுத்தது சினிமாதானே? 

பெண்களைப் பின்னுக்கு இழுக்காதீர்கள்! (“புதுயுகம்” நிகழ்ச்சி நடத்தும் நடிகை சினேகாவுக்கும் சேர்த்து)



கொஞ்சம்போல் படித்து, எப்படியாவது முன்னேறுவோம் என்று உழைக்கும் பெண்களைக்கூட முன்னேற விடாமல்தான் எத்தனை எத்தனை தடைகள்!

புதிதாக வந்திருக்கும் “புதுயுகம்“ தொலைக்காட்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று இன்று கிடைத்த விடுமுறை நாளில் அந்த்த் தொலைக் காட்சியிலேயே அதிகமாக விளம்பரம் செய்யப்படும் “மேளம் கொட்டு தாலி கட்டுநிகழ்ச்சியை இன்று காலை 9மணி முதல் 10மணிவரை பார்த்தேன்.

பின்தொடரும் நிஜத்தின் குரல்!!!

       இன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மீன் சந்தைக்குப் போனேன். கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்த மகள்,  இறால் கேட்டிருந்தாள். விடுதியில் அதெல்லாம் இல்லையாம்.

      மீன்கடையில் இருந்த கூட்டத்தை விடவும் மீனை வெட்டித்தரும் கடைகளில் கூட்டம் அப்பிக்கிடந்தது. அய்யோடா... இன்னிக்கு எவ்ளோ நேரமாகப் போகுதோ என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். (மீன் வகைகளையெல்லாம் விளாவாரியாக எடுத்துச் சொல்லி அவற்றின் ருசி வகைகளை விளக்கும் பிரபஞ்சனின் கதை ஒன்று...)

பொருத்தமான படம் இல்லதான்... 
இறால் விலை பேசிக் கொண்டிருக்கும் போதே “அண்ணே! றால் உரிச்சித் தரவா?என்னும் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பையில் மீன் வேறு இருந்தது. எதார்த்தமாகத் திரும்பிக் கொண்டே “மீனும் இருக்குப்பா.. வெட்டித் தருவியா?என்று கேட்கவும் அந்தச் சிறுவன் “கத்தி இல்லண்ணே.. றால சுத்தமா பண்ணித்தரேண்ணே“ என்று மீண்டும் தன் இலக்கில் குறியாக இருந்தான் (தக்கையின் மீது நான்கு கண்கள்-ந.முத்துச்சாமியின் சிறுகதை நினைவிலாடியது)

காரைக்குடியில் கவிதைப் பயிற்சி முகாம்



சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி அருகில் உள்ளது புதுவயல்
அந்தச் சிறிய கிராமத்தில் நடந்த கவிதைப் பயிற்சி முகாமிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து, தமுஎகச கிளைகளின் தலைவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர் -ஆசிரியர் - பேராசிரியர் என 120பேர் வந்திருந்தார்கள்


“பாரதி படைப்பும்-வாழ்க்கையும்” வினாடி வினாப்போட்டி... அப்ப நீங்க ?

மூத்தவர்கள் வாழ்த்துங்கள், இளையவர்கள் கலந்துகொண்டு அசத்துங்கள்.. வாழ்த்துகள்.
கடந்த 49ஆண்டுகளாக, அரசுப்பள்ளியில் 10,12ஆம் வகுப்பில் முதல்மதிப்பெண் பெறும் மாணவர்களையும்-பயிற்றுவித்த ஆசிரியர்களையும், மாணவரின் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து, அவரவர் படம்பொறித்த கேடயங்களை வழங்கிப் பெருமைப் படுத்திவரும் ஓர் இலக்கிய-சமூக அமைப்பு புதுக்கோட்டையில் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகவும் பெருமை. இந்த ஆண்டு அந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு!

ஒவ்வொரு வீடும் ஒரு 'குறும்பட' அரங்காக வேண்டும்!


ஆலங்குடியில் இன்றுகாலை முதல் 2நாள்கள் நடக்கும் குறும்பட-ஆவணப் படவிழாவை, தொடங்கி வைக்க  வரும்படிக் கவிஞர் நீலா அழைத்திருந்தார். இரண்டு முழுநாளும் உட்கார்ந்து எல்லாப் படங்களையும் பார்க்க ஆசையிருந்தும் என்வேலைகளுக்கிடையில் அது முடியாமல் மதியமே திரும்பிவிட்டேன். ஆனாலும் 3படங்கள் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.
அதில் இரண்டு படம் ஏற்கெனவே  பார்த்ததுதான் 1.நெய்ப்பந்தம் (தமிழ்) 2.IMPOSSIBLE DREAM  (அனிமேஷன் ஆங்கிலக் கார்ட்டூன்) 3.இந்தி டப்பிங் “கேமரா“

“நெய்ப்பந்தம் குறும்படம் பற்றி நண்பர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்
இயக்குநர் எங்கள் ஊர் புதுக்கோட்டை!  அஜீத்தின் இன்றைய “ஆரம்பம்“ திரைப்படம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஆரம்பத்தில் ரொம்பப் பேருக்குத் தெரியாமல் இருந்தபோதே எடுத்த “ராசி“ படத்தின் இயக்குநர் நண்பர் முரளிஅப்பாஸ். (இப்ப ஒரு படத்தில் வில்லனா நடிக்கிறாராம்ல!) அவரது அருமையான குறும்படம்.
இந்திய விடுதலைப் போராட்டக்கால வீரர்களை இப்போதைய இளைஞர்க்குத் தெரிந்திருக்காது! சுதந்திர தினத்தன்று ஏதாவது தொலைக்காட்சியில் வந்து ஏதாவது பேட்டி கொடுத்தால், “பெரிசு அறுவை தாங்கலடா“ என்று சொல்வதும், அடுத்தடுத்த அலைவரிசை ஒன்றில் ஏதாவது சினிமாக்காரர்கள் அளந்துவிட்டுக் கொண்டிருப்பதை உட்கார்ந்து பார்ப்பதை நாமே கூடப் பார்த்திருப்போம்
அப்படிப்பட்டவர்கள் பார்க்க வேண்டிய அருமையான படம்! 18நிமிடம்தான்!
இணைப்பில் யூ-ட்யூப்பில் பார்க்கலாம் –

“கல்கி“ சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற எனது சிறுகதை

 குஞ்சானியின் டாட்டா!
சிறுகதை - நா.முத்துநிலவன்

           “பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாதைரியமாப் போஎன்னநா வரட்டுமா?
     கடைக்காரத் தாத்தா கையை அசைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். குஞ்சானியும் கையை ஆட்டிவிட்டுப் போனதும், முன்பொரு  சமயம் டாட்டா சொல்லப் போய் தனக்கு விழுந்த அடியை நினைத்துக் கொண்டான் குஞ்சானி. முதுகு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
     பஸ்ஸில் இரைச்சல் கலவையாயிருந்தது. எத்தனை பஸ் ஓடினாலும் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு மட்டும் எப்பவும் கூட்டம் நெருக்கியச்சுக்கிட்டுத்தானிருக்கும்.
     சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். சின்ன ஓட்டைதான். கடைக்காரத் தாத்தா குடுத்திருந்த ரெண்டு ரூபாய் நோட்டு கையில் நெருடியது. கொஞ்சம் பழைய நோட்டுத்தான். கசங்கி வேறு இருந்தது. வேறே நோட்டுக் குடுன்னு கண்டக்டர் கேட்டால்?? எறக்கி விட்டுடுவானோ?
     தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் தெரியவில்லை. நாலு முழ வேட்டியின் முனையில் உருட்டுத் தையலைத் தாண்டிக் கொஞ்சம் கிழிந்திருந்தது. வேட்டி முனையைக் காலுக்குள் இடுக்கிக் கொண்டான்.
     பஸ் நடுக்கடையைத் தாண்டிக் கொண்டிருந்தது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி அறிவிப்பு




மலேசியாவைச் சேர்ந்த தமிழ்வலைப்பதிவர் திரு ரூபன் அவர்களும், மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும் “தைத்திங்கல் சிறப்புக் கட்டுரைப்போட்டி” அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விருவருடன், 
நம் வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும், 
மதுரை திரு.எஸ.வி.ரமணி அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக...

குவைத்தில் வாழும் தமிழறிஞர் திரு வித்யாசாகர் அவர்கள், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் அய்யா செல்லப்பா யாகசாமி அவர்களுடன் நானும் ஆக மூவர் நடுவர்களாக...
அறிவிததிருக்கிறார்கள்.

இதுதொடர்பாகக் கடந்த சில நாள்களாகத் திரு ரூபன் அவர்களும், திரு தனபாலன் அவர்களும், தம்பி பாண்டியன் அவர்களும் மாறி மாறி என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்...


இதில் என்னையும் -பொருட்டாக மதித்து- நடுவர்களில் ஒருவராக்கியிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஒருபக்கம்...
 “இந்த இளைஞர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றித்தரவேண்டுமே” என்னும் பொறுப்புணர்வுடன் கூடிய கவலை மறுபக்கமாக இருக்கிறேன்...

போட்டி பற்றிய  விவரம், விதிமுறைகள், தலைப்புகள் முதலானவற்றை அறியவும் அறிவிப்பைக் காணவும் இணைப்பில் சென்று சொடுக்குக - 

http://tamilkkavitaikalcom.blogspot.in/2013/12/blog-post_9.html

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் சென்றும் பார்க்கலாம் -

அவரது தள இணைப்பு -

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html


எழுத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் 
தாமும் கலந்துகொள்வதுடன், 
தத்தம் நண்பர்களுக்குத் தெரிவித்தும், 
தமது வலைப்பக்கங்களில் எடுத்து இட்டும் 
உதவ வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
அலைபேசி - 94431 93293
----------------------------------------------------------- 

குமுதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை “கன்வார்”

கதைக் காலம்: கி.பி. 1564 
கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட  கோண்டுவானா சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி. எல்லை)
---------------- 
     ர்மதா நதியின் வடகரையை அடைந்ததும் கரையேறி அமர்ந்தாள் கன்வார். மூச்சு வாங்கியது. மார்புக் கச்சைக்குள் செருகியிருந்த கட்டாரியை உருவி எடுத்து அடர்ந்த மரங்களுக்கிடையே பரவிக்கிடந்த கற்களின் மீது போட்டுவிட்டு கைகளைப் பின்தாங்கலாக ஊன்றியவாறு ஒரு நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.
     ஈரத் துணியைப் பிழிந்து உடல் முழுவதும் துடைத்தாள். மஞ்சள் வெய்யிலில் மேலும் சிவந்து காணப்பட்டட அவள் முகம் கண்ணீர் பொங்கிப் பொங்கி வழிந்து கன்றிக் கிடந்ததைத் தெளிவாகக் காட்டியது.
     திடுமென்று காதுகள் கூர்மையாயின.
    குதிரைகளின் குளம்பொலிதான்! அதோ தூரத்தில் இரண்டு குதிரைகள்!
   ற்றனைப் போன்ற எச்சரிக்கை உணர்வுடன். சட்டென்று நதிக் கரையை அடுத்திருந்த ஒற்றையடிப் பாதையைத் தாண்டி மூங்கில் புதர்களுக்குள் மறைந்து கொண்டாள்.
  பாரசீகக் குதிரைகளில் காற்றினும் கடுகிப் போய்க் கொண்டிருந்தவர்கள் முகலாய மாமன்னன் அக்பரின் ஆட்கள்.
     கழுகுகளிடமிருந்து தப்பிய கோழிக் குஞ்சு நரிகளைக் கண்டதும் வெடவெடத்தது.
     மூச்சை மெதுவாக விட்டாள். மனம்தான் கனத்துப் போயிருந்தது.
     பதினெட்டு வயதுப் பருவம் அவள் உடலெங்கும் ஓடிப் பரவியிருந்த போதிலும் உள்ளத்துக்குள் அந்தப் பருவத்துக்கே உரிய துள்ளல்கள் ஒடுங்கிப் போய் கவலையே மண்டிக் கிடந்தது. உதடுகள் மட்டும் மால்சிங். மால்சிங். என்று முணுமுணுத்தன.
     பிறந்தது முதல் கணவன் மால்சிங் இறந்தது வரை வளர்ந்த ஊர் இப்போது இவளை விரட்டுகிறதா! இவள் செய்தது தவறா?
     வீர மண்ணைக் கையில் அளைந்தாள்.

போர்க்குணத்துக்கு ஏது தடை? – மொழிபெயர்ப்புக் கவிதை

URDU Poet FAIZ (A) FAIZ
சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன் 
                 சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்! -  நான் 
நெருப்பெனப் பற்றுவேன்!  நிச்சயம் பரவுவேன்! 
                 நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத்  தடுக்கலாம் எண்ணத் தடைபோட 
               எந்தத் தடைச்சட்டம் இங்குவரும்? - என் 
கழுத்தை ஓடிக்கலாம் கையை முறிக்கலாம் 
               கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என் 
               வாழ்க்கையைக் கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பொங்கிடும் போர்க்குணக் கவிதையின் 
               உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
(உருதுக் கவிஞர் 'ஃபெய்ஸ் ஏ ஃபெய்ஸ்' எழுதிய
கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை
மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அஞ்சல் அட்டையில்  வெளியிட்டுள்ளது . 
இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர்
வங்கக் கவிஞர் தேபேஷ் தாகூர்.(ஒரு முகாமில்
சந்தித்தபோது அவர் தந்ததை வாங்கி,
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நா.மு.)



எதுகை மோனையை விரும்பாத வள்ளுவர்!!!



ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பில் தலைப்புக்கேற்பக் கவிதை எழுதுதல், பாதிச் சிறுகதையில் மீதி எழுதி முடித்தல் எனும் படைப்பிலக்கியத்திற்கு 5மதிப்பெண் உண்டு. இது “மாணவரிடையே படைப்புணர்வை வளர்க்க வேண்டும்“ எனும் பல்லாண்டுக் காலக் கல்விக் கோரிக்கை. சமர்சீர்க் கல்வித்திட்டப் பாடநூல் தந்திருக்கும் வாய்ப்பு.
   நான் நடத்திவரும் பத்தாம் வகுப்பில், (பல ஆண்டுகளாக நான் நடத்திவரும் கவிதை வகுப்புகளை நினைவில்கொண்டு) இந்த வகுப்பை மாணவர்க்காக நடத்த முயற்சியெடுத்தேன். அவர்கள் நிலையில் டி.ஆர்.போல “இந்தியாவின் தலைநகரம் டில்லி, செவுத்துல ஓடுறது பல்லி, பசங்க வெளையாடுறது கில்லி, செத்தா வைக்கிறது கொள்ளி, அ டண்டணக்கா அ டணக்குணக்காஎன்பதுதான் கவிதை என்னும் கருத்து ஆழமாகப் பதிந்திருப்பதை அப்போது உணர்ந்தேன்.
       எதுகை மோனை இயல்பாய் வந்தால் அழகுதான். அதற்காக வலிந்து எதுகை மோனை இயைபு(டி.ஆர்.பாணி)வந்தால்தான் கவிதை என்றில்லை என்றால் அவர்கள் என்கருத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.என்மீதுள்ள மரியாதைக்காக (?) மௌனமாக இருந்தனர் போல. இதை அவர்களைக் கவிதை எழுதச் சொன்னபோதுதான் நான் புரிந்துகொண்டேன்.

9,11ஆம் வகுப்புகள் தேவையில்லை?

எங்கள் தாத்தா அவருடைய பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்தில் அவன் என் கூடப்படிச்சவன்'டா, அப்பவே ரெண்டாம் வகுப்பிலிருந்து 'டபுள்ப்ரமோஷன்' வாங்கி நேரா நாலாம் வகுப்புக்குப் போனவன். அதுமட்டுமில்ல, மூணு வருச ‘பி.ஏ.,டிகிரி’ய ஒரே வருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்' வாங்குனவன்" என்று சொல்வார்.
இனிக்கவேண்டிய  கல்வி  கசப்பது ஏன்?
              அதுபற்றி ஆச்சரியமாக இருந்தாலும், வேறு ஒன்றும் கேட்டுக்கொண்டதில்லை. ஆனால். இப்போது நமது, நண்பர்களின் பிள்ளைகள் --9,11 ஆம் வகுப்புகளில் படிப்பதாக நாம்சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே 10,12 வகுப்புப்பாடங்களை இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்ததது! இந்த 'டபுள் ப்ரமோஷன்' ஏன்? இது நமது குழந்தைகளுக்குச் சரியானதுதானா?

இன்றைய தமிழில் பெண்கவிகள்

                                 (தமிழகத்து ஔவை முதல் ஈழத்து அவ்வை வரை)

கவிஞர் இளம்பிறை

கவிதை எழுதும் ஆண்பெண் இருவரையும் குறிக்க, 'கவிஞர்' என்னும் பொதுவான ஒரு சொல் இருக்கும் போது, 'பெண்கவி' என்று தனியாகக் குறிக்க வேண்டுமா?' என்று நினைக்கலாம். 'எல்லாமே ஆண்களுக்காக' என்றாகிப்போன உலகில், 'பெண்'எனும் அடையாளத்தை, தற்காலிகமாகச் சேர்த்தே எழுதவேண்டியுள்ளது. எல்லாம் பொது என்றாகும் ஒரு பொற்காலம் வரும் வரை, தற்காலிகமான இந்தத் தனிஅடையாளம் தவறல்ல 


கவிஞர் குட்டிரேவதி

நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். இவர்களில், அதிகமான(59)பாடல்களை எழுதியவர் ஔவையார் என்பதில் ஒன்றும் பெருமையில்லை,  ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாகும்.அவர் எழுதிய புறநானூறு மட்டுமே 33! அவரே, அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்துகின்ற அளவுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் மிகுந்தவராய் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. அந்த அளவுக்கு வெளிப்படையான அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த பிற்காலப் பெண் 'புலவர்'கள் யாரையும் காணமுடியவில்லை.

       பக்தியிலும், காதலிலும் அழியாப்புகழ்பெற்ற பெண்கள் தமிழிலும் உண்டு. ஆயினும், அரசியலில் சனநாயகம் மலர்வதும், அரசியலில் பெண்கள் ஈடுபடுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பு --டையதாக இருப்பதால், இவை ஒன்றைஒன்று வளர்த்தெடுத்து இருபதாம் நூற்றாண்டில்தான் இரண்டுமே வளரமுடிந்தது.
       ஔவையாரும் சரி, அதற்குப்பின் வந்த பெண்புலவர்களும் சரிபெண்களுக்காகப் பாடியதில் முற்போக்குக் கருத்துக்கள் மிகவும் குறைவே. இன்னும் சொன்னால் – இருபத்தோராம் நூற்றாண்டுவரையிலும் - ஆண்புலவர்கள் பாடிய அளவுக்குக் கூட பெண்கள் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பாடிவிடவில்லை
 "தையல்சொல் கேளேல்" என்றவர் ஔவை! நல்லவேளையாக அந்தத் தையலின் அந்தச் சொல்லைமட்டும் கேளாமல், அதற்கு மாறாக "தையலை உயர்வு செய்" என்றவன் பாரதி!. ஆயினும், பல பத்து நூற்றாண்டாகப் படைக்கப்பட்டுவரும் இலக்கியங்களைப்   படைத்தவர்கள் பெரும்பாலும் ஆண்களே என்பதால், மனிதசமூகத்திற்குச் சொல்வதாக அமைந்த பொதுவான நியாயங்கள் (Common justice to common gender) கூட பெரும்பாலும் ஆண்களுக்கான நியாயங்களாகவே இருந்ததில் வியப்பில்லை இதற்கு வள்ளுவரும் விதிவிலக்கல்ல!

எனது கவிதைத் தொகுப்புக்கு, காலஞ்சென்ற கவிஞர் கந்தர்வன் அவர்கள் எழுதிய அணிந்துரையும் எனது முன்னுரையும்.















வானம்பாடிக் கவிஞர் மீரா அவர்களின் 
“அன்னம்“ வெளியீடாக  வெளிவந்த எனது 
“புதிய மரபுகள்“ கவிதை நூலிலிருந்து...
நா. முத்துநிலவன்
----------------------------------------------------------------------

அணிந்துரை - கந்தர்வன்

புதுமை மிகவும் தற்காலிகமானது. அடுத்து வரும் இன்னொரு புதுமை,  முன்னைப் புதுமையை அலட்சியமாகப் பழசாக்கும். பொருள்கள், கலை, இலக்கியம் இவை தாண்டி, மனிதர்களுக்குப் பிராயங்களும் பழசாகி விடுகிறது. இளமைப் பிராயம், பாலப் பிராயத்தையும், முதுமைப் பிராயம் இளமைப் பிராயத்தையும் இப்படித் தான் ஈவிரக்கமற்றுப் பழசாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் பிராயம் என்பது மடிவதில்லை. அது இன்னொருவனிடத்தில் எப்போதும் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது. பால்யம், இளமை, முதுமை என்ற பிராயங்கள் அன்று முதல் இன்று வரை பொதுவில் ஒன்று எனினும் எல்லாக் காலங்களிலும் அவை ஒரே மாதிரி நடந்து கொண்டதில்லை.
இன்னொரு ஆளும் நுழைகிற மாதிரி ஏன் இப்போது இளைஞன் பனியன் அணிகிறான்? அளவான பனியன் அவனுக்கு அலுத்து விட்டது. ஒரு காலத்தின் அளவுஅடுத்தடுத்த காலத்திற்கு ஓவ்வுவதில்லை.

எங்க ஊருக்கு வயசு 10,000 தெரியுமா?

இது தென்புறம் இருக்கும் ஓவியப்பாறை.
பின்பக்கம் போய் முன்பக்கமாகச் சாய்ந்து ஆய்வு செய்பவர்
முனைவர் நா.அருள்முருகன்  அவர்கள் எங்கள் CEO
கடந்த கால வரலாற்றை  அறியாதவர்கள்,
மீண்டும் அதில் வாழ சபிக்கப்படுவாரகள் என்பது எங்கோ நான் படித்தது நினைவில் இருக்கிறது.

நம் நாட்டு வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு...
அதுவும் நம் ஊரிலேயே என்றால் யாருக்குத்தான் ஆர்வம் வராது...?

அப்படி எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றது முதல் முனைவர் திரு அருள்முருகன் அவர்கள், மாவட்டம் முழுவதும் இருக்கும் பழமையான கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள்...

சரி எல்லா அலுவலர்களையும் போல கோவில்களைப் பார்க்க விரும்புகிறாரோ என்று நான் இதில் முதலில் ஆர்வம் காட்டவில்லை...

பிறகுதான்,
இவர் சாமிகளைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை - நமது 
சரித்திரத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார் 
என்று புரிந்து அவர்மேல் எனக்கும் ஆர்வம் பிறந்தது..

இப்படித்தான், கடந்த தீபாவளி அன்றைக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் அடுத்த நாளும் என்னையும், மகா.சுந்தர், கும.திருப்பதி, மணிகண்டன் ஆகிய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு திருமயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பழங்காலச் சுவடுகள் உள்ள காடு, மலை, புதர், குன்றுகளில் திரிந்து -மதியச் சாப்பாட்டுக்கும் வராமல், வெறும் டீ பன்னுடன் முடித்து- மாலையில் வீடு திரும்பியது தனிக்கதை...

அதற்கு நல்ல பலன் - இதோ எங்கள் மாவட்டப் பழைய வரலாற்றை சற்றேறக்குறைய 3,000 முதல்10,000 ஆண்டுகள் முன்னே கொண்டு போகும் சான்று- ஓவியங்களைக் கண்டு சொல்லியிருக்கிறார் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலரும், நல்ல தமிழறிஞருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.

வடபுறம் உள்ள ஓவியப்பாறையின் தெற்குப் பக்கமாக உள்ள ஓவியங்களில் ஒன்று            வேட்டைக்குப் பின் -தொல்காப்பியம் சொல்லும் “உண்டாட்டு” நிகழ்வாக இருக்கலாம்              கண்டவர் - முனைவர் நா.அருள்முருகன் CEO
பார்க்க இணைப்பு -
அவரது வலைப்பக்கம்      
நண்பர்கள் தொடர்வோர் பட்டியலில் இணைந்து,
அவரது நல்ல தமிழ் ஆய்வுகளைத் தொடர்க...

திருமயத்தில் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள். மேலும் சிலவற்றை
இணைப்பில் சென்று பார்க்க -http://nadainamathu.blogspot.in/2013/11/blog-post_24

நன்றி -
இச்செய்திகளை விரிவாக வண்ணப்படங்களுடன்  23-11-2013 அன்று வெளியிட்ட தி இந்து ஆங்கிலம், இந்து-தமிழ், தினமலர், தினத்தந்தி, தினமணி,தினகரன், மற்றும்  24-11-2013தீக்கதிர் ஆகிய நாளிதழ்களுக்கு நன்றி

ஓர் இலக்கியச் சந்திப்பும் - என் கிளாரா டீச்சர் நினைவுகளும்

         கடந்த 17-11-2013 காலை புதுக்கோட்டையில், ஆக்ஸ்ஃபோர்டு சமையல் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில், இரண்டு சிறுமியர் தாம் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசியபோது  எனது சிறுவயதுப் படிப்பு வாசம் அவர்களிடம் இருப்பதை மகிழ்ச்சியோடு நினைத்தேன்....

நான் அதிராம் பட்டினம் காதிர்முகைதீன் நடுநிலைப்பள்ளியில் 3-5ஆம் வகுப்புப் படித்தபோது, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே நூலக வாசிப்புப் பழக்கம் யார்வழியாக எனக்கு அறிமுகமானதென்று இப்போது நினைவில்லை. அந்த வயதில் நூலகத்தில் உறுப்பினராக முடியாது என்று நூலகர் சொல்ல, எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை அழைத்துக்கொண்டு போய் சிபாரிசு பண்ணச் சொல்லி, -ஏதோ ஒரு பொய்சொல்லி- உறுப்பினரானது மட்டும் நினைவில் இருக்கிறது.
அத்தோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலையில் நூலகம்போய் மதியம் என்னை உள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டு போகச் சொல்லி அந்த வாட்ச்மேன் அய்யாவைக் கேட்க, அவர் பயந்துபோய் அப்படியெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்ல, தொடர்ந்து நூலகம் வரக்கூடியவன், நிறையப் படிக்கக் கூடியவன் என்று அந்த நூலகரையே சொல்லச்சொல்லி, ஒரு வழியாக ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த நூலகத்தில் இருந்துகொண்டு காலை10 முதல் இரவு 8மணிவரை தொடர்ந்து படித்ததை இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. அப்படி, அந்த நூலகத்தில் இருந்த தெனாலிராமன் (மரியாதை ராமன்) கதைகள், சிநதுபாத் கடல்பயணங்கள், பீர்பால் கதைகள் முதலான குழந்தைக் கதைப்புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன்.
(பிறகு என் பள்ளிவிடுமுறை நாட்களில் எல்லாம் உறவினர் வீடுகளுக்குப் போன ஊர்களான அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நூலகங்கள் மற்றும் திருவோணத்தில் 10,11ஆம் வகுப்புப் படித்தபோது ஊரணிபுரம் அருகில் உள்ள கல்லாக்கோட்டை கிளை நூலகங்களில் படித்த புத்தகங்கள் அடடா! அறந்தாங்கி கிளைநூலகத்தில் 1970இல், நான்எடுத்த குறிப்புகள் இப்போதும் என்னிடம் இருக்கிறது பிறகு, திருவையாற்று அரசர் கல்லூரியில் படித்தபோது, முதல்வர் முனைவர் சு.சண்முகானந்தம் என்ற பாரதிப்பித்தன் அவர்களின் வீட்டில் படித்தபோது எடுத்த சி.சு.செல்லப்பாவின் “எழுத்துஇதழ்ப்படைப்புகளின் பெரும்பாலான குறிப்புகள்... பெரிய கருவூலம்போல அதைஎடுத்துப் பார்ப்பதில் இப்போதும் ஒரு மகிழ்ச்சி!
9,10ஆம் வகுப்பை மட்டும் மீண்டும் அதிராம் பட்டினத்தில் படித்த போது, எனது கணித ஆசிரியர் திரு பத்மநாபன் சார் வகுப்பிலேயே “யவனராணி“ நாவலைப் படிக்க அனுமதி தந்ததும், பிறகு அவர் வீட்டிற்குப் போய் அவர் வைத்திருந்த “பொன்னியின் செல்வனை“ வீட்டுக்கு எடுத்துவந்து அரையாண்டு விடுமுறைக்குள் ஐந்து பாகங்களையும் படித்து முடித்ததும்... சார் நீங்க இப்ப எங்கசார் இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா சார்?)
பிறகு திருவையாறு அரசர் தமிழ்க்கல்லூரியில் படித்தபோது, அங்கு திருமானூர்ச் சாலையிலிருந்த கிளைநூலகம், கல்லூரி நூலகம், மற்றும் தஞ்சாவூரில் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பெரியகோவில் போகும் வழியில் இருந்த பெரிய நூலகம்... இதெல்லாம்தான் என் “புனித யாத்திரைதலங்கள்!
இப்போது மீண்டும் அதிராம் பட்டினத்திற்கு வருவோம்- 

பாவலர் ஓம் முத்துமாரி காலமானார்

பிரபலமான கிழவி வேடத்தில்
பாவலர் ஓம்முத்துமாரி
“என்னம்மா தேவி ஜக்கம்மா - உலகம் தலைகீழாத் தொங்குதே ஞாயமா? - இப்ப
சின்னஞ்சிறுசெல்லாம்
சிகிரெட்டுப் புடிக்குது
சித்தப்பன் மார்கிட்ட தீப்பெட்டி கேக்குது! - என்னம்மா தேவி ஜக்கம்மா”
என்னும் கிராமியப் பாடல் எங்கேயாவது உங்கள் காதுகளில் விழுந்திருக்கலாம். பலரையும் கவனிக்க வைத்த பாடல் அது.

தமிழகத்துக் கிராமியக் கலையன்பர்கள் எல்லாம் பாவலர் ஓம் முத்துமாரி என்று மிகுந்த அன்போடும் மரியாதையோடும் அழைத்த அந்தக் கிராமத்துக் குயில் இன்று நம்மை விட்டுப் பறந்து போய்விட்டது. அவருக்கு நமது வீரவணக்கம்!

80வயதுக்கும் மேலாகிவிட்ட அவர் இறுதிவரை தன்குழுவினரோடும் கரகரக் குரலோடும் தமிழ்நாட்டின் ஏராளமான பல்லாயிரக்கணக்கான மேடைகளில் எல்லாம் முழங்கியவர். கலைஇரவு நிகழ்ச்சிகள் அவரால் களைகட்டிவிடும்!

நெல்லை கரிசல்குயில் கி்ருஷ்ணசாமி பாடிய எனது இசைப்பாடல்


எந்தையும் தாயும்... (இசைப்பாடல்) - நா.முத்துநிலவன்


பண்டைப் புகழும் பாரம் பரியப்
                பண்புகள் மிக்கதும் இந்நாடே! – அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
                மண்டை உடைவதும் இந்நாடே!

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
                ஏளனம் செய்வதும் இந்நாடே! - வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
                சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
                வளம் கொழிப்பதும் இந்நாடே!-தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
                பரம்பரை யாவதும் இந்நாடே! 

வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
                வெந்து கிடப்பதும் இந்நாடே!-பட்ட
நூலைப் பிடித்தவர் வேலைக்கலைந்துயிர்
                நொந்து கிடப்பதும் இந்நாடே!

அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
                அவதிப் படுவதும் இந்நாடே!-தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
                காலட் சேபமும் இந்நாடே!

கவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்துரை

         நேர்மையான கவிதைகள் 

 அணிந்துரைநா.முத்துநிலவன்
மகளாய், மனைவியாய்,  தாயாய்,  ஆசிரியராய்,  இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களில் தானும் ஒருவராய், சமூக உணர்வுள்ள சிறந்த மனிதருள் ஒருவராய்,  தன் சுயஅனுபவங்களையே, கொஞ்சமாய்க் கற்பனை கலந்து(?) நெஞ்சைச் சுடும் கூர்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டு, நேர்மையான கவிதைகளாய்த் தந்திருக்கிறார் கீதா.
இதற்காகவே இவரது படைப்புகளை
வரவேற்க வேண்டும்.   

ஏனெனில்,  நான் ஏற்கெனவே மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் ோராம் கவிதைத் தொகுப்பிற்குத் தந்த முன்னுரையில் சொன்னதுபோல, “எழுதும் பெண்கள் நம் சமூகத்தில் குறைவு. அதிலும் சமூக உணர்வோடு எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் அரசியலை-பெண்ணியக் கருத்துகளைச் சரியாகப் பாடுவோர் மிகமிகவும் குறைவு. இந்த மிகமிகவும் குறைவான எண்ணிக்கையில் கீதா இடம் பெற்றிருப்பதே முதலில் பாராட்டுக்கு உரியது தானே? 

கல்கியில் வெளிவந்து, எம்ஏ தமிழ் வகுப்புக்குப் பாடநூலான எனது கவிதை



ஜெயஹே!
ஜெயஹே!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே!





எதிரிகளை வணங்கி            
கிருஷ்ணனைக் குறிபார்க்கும்
அர்ச்சுனர்கள்.

துச்சாதனன் பதற
பாஞ்சாலியை உரிக்கும்
பாண்டவர்கள்

கோவலனை எதிர்த்து
பாண்டியனிடம் நீதிகேட்கும்
கண்ணகியர்.

கலைஞர் தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் பார்க்க...









திரைப்படங்களில் 
சிறந்தகருத்துகளை 
சொல்வதற்குத் தேவை- 
சிரிப்பா? சிந்தனையா?
நடுவர் – 
நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி

பேச்சாளர்கள் –
சிந்தனையே
புதுக்கோட்டை முத்துநிலவன்
கவிஞர் இனியவன்

சிரிப்பே – 
மதுக்கூர் இராமலிங்கம், 
பேரா.விஜயகுமார்.

------------- நன்றி – கலைஞர் தொலைக்காட்சி

கேட்டும் பார்த்தும் மகிழ -