வேளாண் கல்லூரியில் தமிழ்விழா!

தமிழ்ப் பயிர் வளர்க்கும் அரசு வேளாண் கல்லூரி!

திருநெல்வேலியிலிருந்து 15கி.மீ.
ஆனால் அது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்.

கிள்ளிகுளம்

அங்கிருக்கும் அரசு வேளாண் கல்லூரி முத்தமிழ் விழா
சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள்...
அலட்சியத்துடன்தான் போனேன்

கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி
தஞ்சை மருத்துவக் கல்லூரி உட்பட....

எத்தனை நூறு கலைக்கல்லூரிகள் பார்த்தாச்சு...

இவர்கள் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள் என்னும் அலட்சியத்துடன்தான் போய் நெல்லையில் இறங்கினேன்.

இரவு 10மணிக்குமேல்- நான் போய் இறங்கிய சில நிமிடங்களில்
“அய்யா எங்கய்யா இருக்கீங்க?” என்று அழகிய தமிழில் அழைப்பு!
அவர்களை அடையாளம் சொல்லச் சொன்னால்...
“அய்யா நாங்க பாத்துட்டோம்யா... அப்படியே திரும்பிப் பாருங்க... உங்களுக்கு நேர் பின்னால 2பேரு வேட்டிகட்டிக்கிட்டு...”

திரும்பினால் ஆச்சரியமாய்...
தழையத் தழைய பட்டுவேட்டியுடன் இளைஞர் இருவர்.
ஒருவர் என் பெட்டியைப் பிடுங்கப் பார்க்க
என் இயல்பில் மறுத்துவிட்டு “வண்டி எங்க நிக்கிது?“ என்று கேட்க...
பொலிரோ கதவை ஒரு மாணவர் திறக்க,
“அய்யா உட்காருங்களய்யா” இன்னொருவர் சொல்ல...
எனக்கு அப்போது தொடங்கிய வியப்பும் மகிழ்ச்சியும்
அடுத்த நாள் மதியம் விழா முடிந்து என்னைத் திரும்பவும்
நெல்லையில் கொணடுவந்து விட்ட வரை மாறவே இல்லை...

கல்லூரி வாசலில் பெரீய்ய்ய திருவள்ளுவர் பதாகையுடன் விழா அழைப்பு
உள்ளே திரும்பினால் சிலம்புடன் கண்ணகி... அந்தப்பக்கம் பரதப் பதாகை

முத்தமி்ழ் விழாவாம்....  அசத்திவிட்டார்கள் வேளாண்கல்லூரி மாணவர்!

காலையில் கல்லூரி முதல்வர் வந்து கூடஇருந்து காலை உணவு!
சிறப்பு விருந்தினருக்கான கௌரவமாம்!
ஒவ்வொன்றிலும் பார்த்துப் பார்த்துச் செய்து வியப்படைய வைத்தார்கள்!

விழா வாசலில் -
வரவேற்கும் மாணவியர் அழகான புடவைகளில் புன்னகைக்க...
அது இயல்புதானே என்று பார்த்தால் பெரும்பாலான விழாக்குழுப் பெண்கள் புடவையிலேயே இருப்பதைப் பார்த்து வியந்தும் மகிழ்ந்தும் போனேன்...

விழாமேடையில் இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும் கோட்டும் பேண்ட்டும் போட்டு மிரட்டினார்கள்...

உண்மையிலேயே தமிழ்வழியில் படிக்காத -படிக்க முடியாத- அரசு ஏற்பாடு இல்லாததால்- ஆங்கில வழியிலேயே அவ்வளவு பேரும் தகுதி-மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெற்றிருந்ததால் அவ்வளவு ஒழுங்கு நேர்த்தி!

நான் சிட்டுக் குரு்வியே சிறகை விரி! எனும் தலைப்பில் பேசினேன்.

நகைச்சுவைக்குக் கூட அளவாகத்தான் சிரித்தார்கள் என்றால் பாருங்கள்

பிற கல்லூரிகளைப் போல அல்லாமல் பொறுப்பு முதல்வர் அவர்களும், பேராசிரிய நண்பர்களும் இயல்பாகப் பேசினார்கள்...

மொத்தத்தில் -
தமிழ் மணம் கமழ்ந்த தமிழ்விழா!
என் மனம் கவர்ந்த கிள்ளிகுளம் வேளாண்கல்லூரி முத்தமிழ் விழா!

எதிர்கால இந்தியா இவர்கள் கையில் பத்திரமாக முன்னேறும்!
வாழ்க கல்லூரி நிர்வாகம், வளர்க அந்தச் சிட்டுக் குருவிகளின் சிறகுகள்!


---------  நன்றி- 
முகமது இக்ஷான்
நிகழ்ச்சிப் பொறுப்பாளர் -உண்மையிலேயே அழகான
மாணவர் ஒருங்கிணைப்பாளர் ----------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக