கைக்குறிச்சி பாரதி கல்லூரியில் கவிதைப் பயிலரங்கம்

படம், செய்திக்கு நன்றி- நக்கீரன் இணைய இதழ்

பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவியர் முதலிரு படங்களில் உள்ளனர் அடுத்தடுத்து..
மேடையில் -இடமிருந்து வலமாக- கைக்குறிச்சி பாரதி கலை-அறிவியல் மகளிர் கலலூரி முதல்வர் ஜானகிசுவாமிநாதன், பேரா.மு.பா., பரிசுபெறும் மாணவியர்,
கவிஞர் ரமா.ராமநாதன், கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், நா.முத்துநிலவன்,
கவிஞர் சு.மதியழகன்,தமுஎச கிளைச்செயலர் கவிஞர் செ.சுவாதி ஆகியோர் உள்ளனர்
---------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர்  கல்லூரியில் தமுஎகச திருக்கோகர்ணம் கிளை ஒருநாள் கவிதைப் பயிலரங்கம் நடத்தியது.

நான் தொலைக்காட்சியில் பேசுவது தவறா? - வாசகர்கள் கருத்துச் சொல்லுங்கள்


கணையாழி இதழில் வெளிவந்த எனது கட்டுரையை எனது வலையின் முந்திய பதிவாக இட்டிருந்தேன் அது பற்றிய   நண்பர்களின் கருத்தில் ஒரு கருத்தை மட்டும் நான் வெளியிடவில்லை.

அவர் பெயர் திரு அருள்மொழி. ஊர் தெரியவில்லை.
 “சினிமா நடிகர்களைக் குறைசொல்வது இருக்கட்டும். உங்களைப் போன்ற தமிழ் வாத்தியார்கள் பட்டிமன்றம் என்னும் பெயரில் அடிக்கும் கூத்தை நிறுத்துங்கள். பிறகு சினிமா நடிகர்களைக் குறை சொல்லலாம்” என்று கருத்திட்டிருந்தார்.

“தீபம்”இலக்கிய இதழில் வெளிவந்த என் கவிதை



கவியுதிர் காலம்

அடே அப்பா!
எத்தனை கவிஞர்கள்
எத்தனை கவிதைகள்!
ஓ!
இந்த
இலையுதிர்காலத்தின்
இறுதியில்தான்
வசந்தம்
வரவிருக்கிறதோ!?!
--நா.முத்துநிலவன்

(நன்றி-
 தீபம் இலக்கிய மாத இதழ்
ஆசிரியர்-நா.பார்த்தசாரதி,
 டிசம்பர்-1983)
---------------------------------------

பொறுப்பற்ற சினிமாக்காரர்கள்





மற்ற நாடுகளெல்லாம் 
வரைபடத்தில் இருக்கின்றன 
தமிழ்நாடு மட்டும் 
திரைப்படத்தில் இருக்கிறது


என்று  சாடினார்  
கவிஞர் நெல்லை ஜெயந்தா 

பேராண்மை, சாட்டை, வழக்குஎண் 18/9, அண்மையில் வந்திருக்கும் தங்கமீன்கள் முதலான வெகுசில படங்களின் இயக்குநர்களைத் தவிர மற்ற “மாபெரும் நடிகர்களின்” படங்கள் எல்லாவற்றையும் பார்க்கிற வெளிநாட்டவரும், நம் அடுத்த தலைமுறையும் தற்போது தமிழகத்தில் வந்துகொண்டிருக்கும் மசாலாப் படங்களை மாபெரும் வெற்றிப் படங்களாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நமைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்று யோசிக்கவே வெட்கமாக இருக்கிறது.
            ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக் கூடத் தன் பொறுப்பை உணராத விஜயகாந்த்துக் கெல்லாம் “தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் ஆகிவிடலாம்”எனும் அசட்டுத் துணிச்சலைக் கொடுத்தது சினிமாதானே? 

பெண்களைப் பின்னுக்கு இழுக்காதீர்கள்! (“புதுயுகம்” நிகழ்ச்சி நடத்தும் நடிகை சினேகாவுக்கும் சேர்த்து)



கொஞ்சம்போல் படித்து, எப்படியாவது முன்னேறுவோம் என்று உழைக்கும் பெண்களைக்கூட முன்னேற விடாமல்தான் எத்தனை எத்தனை தடைகள்!

புதிதாக வந்திருக்கும் “புதுயுகம்“ தொலைக்காட்சி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று இன்று கிடைத்த விடுமுறை நாளில் அந்த்த் தொலைக் காட்சியிலேயே அதிகமாக விளம்பரம் செய்யப்படும் “மேளம் கொட்டு தாலி கட்டுநிகழ்ச்சியை இன்று காலை 9மணி முதல் 10மணிவரை பார்த்தேன்.

பின்தொடரும் நிஜத்தின் குரல்!!!

       இன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மீன் சந்தைக்குப் போனேன். கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்த மகள்,  இறால் கேட்டிருந்தாள். விடுதியில் அதெல்லாம் இல்லையாம்.

      மீன்கடையில் இருந்த கூட்டத்தை விடவும் மீனை வெட்டித்தரும் கடைகளில் கூட்டம் அப்பிக்கிடந்தது. அய்யோடா... இன்னிக்கு எவ்ளோ நேரமாகப் போகுதோ என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். (மீன் வகைகளையெல்லாம் விளாவாரியாக எடுத்துச் சொல்லி அவற்றின் ருசி வகைகளை விளக்கும் பிரபஞ்சனின் கதை ஒன்று...)

பொருத்தமான படம் இல்லதான்... 
இறால் விலை பேசிக் கொண்டிருக்கும் போதே “அண்ணே! றால் உரிச்சித் தரவா?என்னும் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பையில் மீன் வேறு இருந்தது. எதார்த்தமாகத் திரும்பிக் கொண்டே “மீனும் இருக்குப்பா.. வெட்டித் தருவியா?என்று கேட்கவும் அந்தச் சிறுவன் “கத்தி இல்லண்ணே.. றால சுத்தமா பண்ணித்தரேண்ணே“ என்று மீண்டும் தன் இலக்கில் குறியாக இருந்தான் (தக்கையின் மீது நான்கு கண்கள்-ந.முத்துச்சாமியின் சிறுகதை நினைவிலாடியது)

காரைக்குடியில் கவிதைப் பயிற்சி முகாம்



சிவகங்கை மாவட்டம் 
காரைக்குடி அருகில் உள்ளது புதுவயல்
அந்தச் சிறிய கிராமத்தில் நடந்த கவிதைப் பயிற்சி முகாமிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து, தமுஎகச கிளைகளின் தலைவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர் -ஆசிரியர் - பேராசிரியர் என 120பேர் வந்திருந்தார்கள்


“பாரதி படைப்பும்-வாழ்க்கையும்” வினாடி வினாப்போட்டி... அப்ப நீங்க ?

மூத்தவர்கள் வாழ்த்துங்கள், இளையவர்கள் கலந்துகொண்டு அசத்துங்கள்.. வாழ்த்துகள்.
கடந்த 49ஆண்டுகளாக, அரசுப்பள்ளியில் 10,12ஆம் வகுப்பில் முதல்மதிப்பெண் பெறும் மாணவர்களையும்-பயிற்றுவித்த ஆசிரியர்களையும், மாணவரின் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து, அவரவர் படம்பொறித்த கேடயங்களை வழங்கிப் பெருமைப் படுத்திவரும் ஓர் இலக்கிய-சமூக அமைப்பு புதுக்கோட்டையில் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகவும் பெருமை. இந்த ஆண்டு அந்த மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் பொன்விழா ஆண்டு!

ஒவ்வொரு வீடும் ஒரு 'குறும்பட' அரங்காக வேண்டும்!


ஆலங்குடியில் இன்றுகாலை முதல் 2நாள்கள் நடக்கும் குறும்பட-ஆவணப் படவிழாவை, தொடங்கி வைக்க  வரும்படிக் கவிஞர் நீலா அழைத்திருந்தார். இரண்டு முழுநாளும் உட்கார்ந்து எல்லாப் படங்களையும் பார்க்க ஆசையிருந்தும் என்வேலைகளுக்கிடையில் அது முடியாமல் மதியமே திரும்பிவிட்டேன். ஆனாலும் 3படங்கள் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.
அதில் இரண்டு படம் ஏற்கெனவே  பார்த்ததுதான் 1.நெய்ப்பந்தம் (தமிழ்) 2.IMPOSSIBLE DREAM  (அனிமேஷன் ஆங்கிலக் கார்ட்டூன்) 3.இந்தி டப்பிங் “கேமரா“

“நெய்ப்பந்தம் குறும்படம் பற்றி நண்பர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்
இயக்குநர் எங்கள் ஊர் புதுக்கோட்டை!  அஜீத்தின் இன்றைய “ஆரம்பம்“ திரைப்படம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஆரம்பத்தில் ரொம்பப் பேருக்குத் தெரியாமல் இருந்தபோதே எடுத்த “ராசி“ படத்தின் இயக்குநர் நண்பர் முரளிஅப்பாஸ். (இப்ப ஒரு படத்தில் வில்லனா நடிக்கிறாராம்ல!) அவரது அருமையான குறும்படம்.
இந்திய விடுதலைப் போராட்டக்கால வீரர்களை இப்போதைய இளைஞர்க்குத் தெரிந்திருக்காது! சுதந்திர தினத்தன்று ஏதாவது தொலைக்காட்சியில் வந்து ஏதாவது பேட்டி கொடுத்தால், “பெரிசு அறுவை தாங்கலடா“ என்று சொல்வதும், அடுத்தடுத்த அலைவரிசை ஒன்றில் ஏதாவது சினிமாக்காரர்கள் அளந்துவிட்டுக் கொண்டிருப்பதை உட்கார்ந்து பார்ப்பதை நாமே கூடப் பார்த்திருப்போம்
அப்படிப்பட்டவர்கள் பார்க்க வேண்டிய அருமையான படம்! 18நிமிடம்தான்!
இணைப்பில் யூ-ட்யூப்பில் பார்க்கலாம் –

“கல்கி“ சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற எனது சிறுகதை

 குஞ்சானியின் டாட்டா!
சிறுகதை - நா.முத்துநிலவன்

           “பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாதைரியமாப் போஎன்னநா வரட்டுமா?
     கடைக்காரத் தாத்தா கையை அசைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். குஞ்சானியும் கையை ஆட்டிவிட்டுப் போனதும், முன்பொரு  சமயம் டாட்டா சொல்லப் போய் தனக்கு விழுந்த அடியை நினைத்துக் கொண்டான் குஞ்சானி. முதுகு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
     பஸ்ஸில் இரைச்சல் கலவையாயிருந்தது. எத்தனை பஸ் ஓடினாலும் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு மட்டும் எப்பவும் கூட்டம் நெருக்கியச்சுக்கிட்டுத்தானிருக்கும்.
     சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். சின்ன ஓட்டைதான். கடைக்காரத் தாத்தா குடுத்திருந்த ரெண்டு ரூபாய் நோட்டு கையில் நெருடியது. கொஞ்சம் பழைய நோட்டுத்தான். கசங்கி வேறு இருந்தது. வேறே நோட்டுக் குடுன்னு கண்டக்டர் கேட்டால்?? எறக்கி விட்டுடுவானோ?
     தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். யாரும் தெரியவில்லை. நாலு முழ வேட்டியின் முனையில் உருட்டுத் தையலைத் தாண்டிக் கொஞ்சம் கிழிந்திருந்தது. வேட்டி முனையைக் காலுக்குள் இடுக்கிக் கொண்டான்.
     பஸ் நடுக்கடையைத் தாண்டிக் கொண்டிருந்தது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி அறிவிப்பு




மலேசியாவைச் சேர்ந்த தமிழ்வலைப்பதிவர் திரு ரூபன் அவர்களும், மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும் “தைத்திங்கல் சிறப்புக் கட்டுரைப்போட்டி” அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விருவருடன், 
நம் வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும், 
மதுரை திரு.எஸ.வி.ரமணி அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக...

குவைத்தில் வாழும் தமிழறிஞர் திரு வித்யாசாகர் அவர்கள், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கும் அய்யா செல்லப்பா யாகசாமி அவர்களுடன் நானும் ஆக மூவர் நடுவர்களாக...
அறிவிததிருக்கிறார்கள்.

இதுதொடர்பாகக் கடந்த சில நாள்களாகத் திரு ரூபன் அவர்களும், திரு தனபாலன் அவர்களும், தம்பி பாண்டியன் அவர்களும் மாறி மாறி என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்...


இதில் என்னையும் -பொருட்டாக மதித்து- நடுவர்களில் ஒருவராக்கியிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஒருபக்கம்...
 “இந்த இளைஞர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றித்தரவேண்டுமே” என்னும் பொறுப்புணர்வுடன் கூடிய கவலை மறுபக்கமாக இருக்கிறேன்...

போட்டி பற்றிய  விவரம், விதிமுறைகள், தலைப்புகள் முதலானவற்றை அறியவும் அறிவிப்பைக் காணவும் இணைப்பில் சென்று சொடுக்குக - 

http://tamilkkavitaikalcom.blogspot.in/2013/12/blog-post_9.html

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் சென்றும் பார்க்கலாம் -

அவரது தள இணைப்பு -

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html


எழுத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் 
தாமும் கலந்துகொள்வதுடன், 
தத்தம் நண்பர்களுக்குத் தெரிவித்தும், 
தமது வலைப்பக்கங்களில் எடுத்து இட்டும் 
உதவ வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
அலைபேசி - 94431 93293
----------------------------------------------------------- 

குமுதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை “கன்வார்”

கதைக் காலம்: கி.பி. 1564 
கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட  கோண்டுவானா சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி. எல்லை)
---------------- 
     ர்மதா நதியின் வடகரையை அடைந்ததும் கரையேறி அமர்ந்தாள் கன்வார். மூச்சு வாங்கியது. மார்புக் கச்சைக்குள் செருகியிருந்த கட்டாரியை உருவி எடுத்து அடர்ந்த மரங்களுக்கிடையே பரவிக்கிடந்த கற்களின் மீது போட்டுவிட்டு கைகளைப் பின்தாங்கலாக ஊன்றியவாறு ஒரு நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.
     ஈரத் துணியைப் பிழிந்து உடல் முழுவதும் துடைத்தாள். மஞ்சள் வெய்யிலில் மேலும் சிவந்து காணப்பட்டட அவள் முகம் கண்ணீர் பொங்கிப் பொங்கி வழிந்து கன்றிக் கிடந்ததைத் தெளிவாகக் காட்டியது.
     திடுமென்று காதுகள் கூர்மையாயின.
    குதிரைகளின் குளம்பொலிதான்! அதோ தூரத்தில் இரண்டு குதிரைகள்!
   ற்றனைப் போன்ற எச்சரிக்கை உணர்வுடன். சட்டென்று நதிக் கரையை அடுத்திருந்த ஒற்றையடிப் பாதையைத் தாண்டி மூங்கில் புதர்களுக்குள் மறைந்து கொண்டாள்.
  பாரசீகக் குதிரைகளில் காற்றினும் கடுகிப் போய்க் கொண்டிருந்தவர்கள் முகலாய மாமன்னன் அக்பரின் ஆட்கள்.
     கழுகுகளிடமிருந்து தப்பிய கோழிக் குஞ்சு நரிகளைக் கண்டதும் வெடவெடத்தது.
     மூச்சை மெதுவாக விட்டாள். மனம்தான் கனத்துப் போயிருந்தது.
     பதினெட்டு வயதுப் பருவம் அவள் உடலெங்கும் ஓடிப் பரவியிருந்த போதிலும் உள்ளத்துக்குள் அந்தப் பருவத்துக்கே உரிய துள்ளல்கள் ஒடுங்கிப் போய் கவலையே மண்டிக் கிடந்தது. உதடுகள் மட்டும் மால்சிங். மால்சிங். என்று முணுமுணுத்தன.
     பிறந்தது முதல் கணவன் மால்சிங் இறந்தது வரை வளர்ந்த ஊர் இப்போது இவளை விரட்டுகிறதா! இவள் செய்தது தவறா?
     வீர மண்ணைக் கையில் அளைந்தாள்.

போர்க்குணத்துக்கு ஏது தடை? – மொழிபெயர்ப்புக் கவிதை

URDU Poet FAIZ (A) FAIZ
சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன் 
                 சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்! -  நான் 
நெருப்பெனப் பற்றுவேன்!  நிச்சயம் பரவுவேன்! 
                 நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத்  தடுக்கலாம் எண்ணத் தடைபோட 
               எந்தத் தடைச்சட்டம் இங்குவரும்? - என் 
கழுத்தை ஓடிக்கலாம் கையை முறிக்கலாம் 
               கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என் 
               வாழ்க்கையைக் கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பொங்கிடும் போர்க்குணக் கவிதையின் 
               உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
(உருதுக் கவிஞர் 'ஃபெய்ஸ் ஏ ஃபெய்ஸ்' எழுதிய
கருத்துச் சுதந்திரம் பற்றிய இக்கவிதையை
மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
அஞ்சல் அட்டையில்  வெளியிட்டுள்ளது . 
இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர்
வங்கக் கவிஞர் தேபேஷ் தாகூர்.(ஒரு முகாமில்
சந்தித்தபோது அவர் தந்ததை வாங்கி,
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நா.மு.)



எதுகை மோனையை விரும்பாத வள்ளுவர்!!!



ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பில் தலைப்புக்கேற்பக் கவிதை எழுதுதல், பாதிச் சிறுகதையில் மீதி எழுதி முடித்தல் எனும் படைப்பிலக்கியத்திற்கு 5மதிப்பெண் உண்டு. இது “மாணவரிடையே படைப்புணர்வை வளர்க்க வேண்டும்“ எனும் பல்லாண்டுக் காலக் கல்விக் கோரிக்கை. சமர்சீர்க் கல்வித்திட்டப் பாடநூல் தந்திருக்கும் வாய்ப்பு.
   நான் நடத்திவரும் பத்தாம் வகுப்பில், (பல ஆண்டுகளாக நான் நடத்திவரும் கவிதை வகுப்புகளை நினைவில்கொண்டு) இந்த வகுப்பை மாணவர்க்காக நடத்த முயற்சியெடுத்தேன். அவர்கள் நிலையில் டி.ஆர்.போல “இந்தியாவின் தலைநகரம் டில்லி, செவுத்துல ஓடுறது பல்லி, பசங்க வெளையாடுறது கில்லி, செத்தா வைக்கிறது கொள்ளி, அ டண்டணக்கா அ டணக்குணக்காஎன்பதுதான் கவிதை என்னும் கருத்து ஆழமாகப் பதிந்திருப்பதை அப்போது உணர்ந்தேன்.
       எதுகை மோனை இயல்பாய் வந்தால் அழகுதான். அதற்காக வலிந்து எதுகை மோனை இயைபு(டி.ஆர்.பாணி)வந்தால்தான் கவிதை என்றில்லை என்றால் அவர்கள் என்கருத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.என்மீதுள்ள மரியாதைக்காக (?) மௌனமாக இருந்தனர் போல. இதை அவர்களைக் கவிதை எழுதச் சொன்னபோதுதான் நான் புரிந்துகொண்டேன்.

9,11ஆம் வகுப்புகள் தேவையில்லை?

எங்கள் தாத்தா அவருடைய பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்தில் அவன் என் கூடப்படிச்சவன்'டா, அப்பவே ரெண்டாம் வகுப்பிலிருந்து 'டபுள்ப்ரமோஷன்' வாங்கி நேரா நாலாம் வகுப்புக்குப் போனவன். அதுமட்டுமில்ல, மூணு வருச ‘பி.ஏ.,டிகிரி’ய ஒரே வருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்' வாங்குனவன்" என்று சொல்வார்.
இனிக்கவேண்டிய  கல்வி  கசப்பது ஏன்?
              அதுபற்றி ஆச்சரியமாக இருந்தாலும், வேறு ஒன்றும் கேட்டுக்கொண்டதில்லை. ஆனால். இப்போது நமது, நண்பர்களின் பிள்ளைகள் --9,11 ஆம் வகுப்புகளில் படிப்பதாக நாம்சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே 10,12 வகுப்புப்பாடங்களை இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்ததது! இந்த 'டபுள் ப்ரமோஷன்' ஏன்? இது நமது குழந்தைகளுக்குச் சரியானதுதானா?