சமயச் சார்பற்ற தமிழ் மரபு தழைக்கட்டும்.

இன்றைய புதுமை எல்லாவற்றுக்கும் சிறிதளவேனும் ஒரு மூலம் இருக்கும். சிந்தனையோ செயலோ, பொருளோ அடுத்தடுத்துத் தொடர்வதுதான் பரிணாமம்! இன்றைய பழமை நேற்றைய புதுமை, இன்றைய புதுமை நாளை பழசாகிவிடும்! முந்திய பழமையின் நல்லனவற்றை நாடி எடுத்துக் கொள்வதும் சொல்வதும்
அடுத்து வரும் புதுமையை வளர்ப்போரின் அரிய கடமையாகும். 
     ஆய்வுகள், நாட்டு வரலாற்றை அறிவதில் மட்டுமல்ல, நம் வீட்டு வரலாற்றை அறிவதிலும் கொண்டுபோய் விட்டால் நல்லதுதான்! இந்த முன்கதைகளில் –நம் தாத்தாக்களின் கதைகளில்- நம் பாசத்திற்குரிய “பாட்டிகள்“ தாமாய்ச் சேர்த்தது என்ன? தெரிந்தோ தெரியாமலேர் நீக்கியது என்ன? என்று, தெரிந்து பயன்கொள்ள, நமக்கும் சாமர்த்தியம் வேண்டும் அப்போதுதான் நாளைய வெற்றி நம் வசமாகும்.
நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள நம் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சி, சங்கிலியாகக் கோக்க முடியாமல் கிடக்கிறது. அறுபட்ட கண்ணிகளின் அழகே நம்மை மட்டுமின்றி உலகையும் ஈர்க்கிறதெனில் நம் கடமை பெரிதாகிறது! அதன் சிறு முயற்சியாக, கிடைத்த கண்ணிகளை வரிசைப்படுத்திப் பார்க்கும் முயற்சியே இன்றைய வரலாற்றுத் தேவை! தவறுகள் நிகழலாம். முயல்வதில் தவறில்லையே!

“தாள்கள் இல்லா நாடாளுமன்றம்“ போல, தாள்கள் இல்லாத் தேர்வுகள் எப்போது வரும்?

   
இன்றைய தினமணி தலையங்கம் “காலத்துக் கேற்ற மாற்றம்“ மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது!
   “2011-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடாளுமன்றம் நடைபெறும் நாளில் ஓர் உறுப்பினருக்கு சராசரியாக 200 தாள்கள் கொண்ட பல்வேறு அறிவிக்கை, ஆண்டறிக்கை வழங்கப்படுவது தெரியவந்தது. மக்களவையில் 525 உறுப்பினர் க்கும் ஒரு நாளைக்கு 1,05,000 தாள்கள் தினமும் தரப்பட்டன. இவற்றை பல உறுப்பினர்கள் திருப்பிக்கூட பார்ப்பதில்லை. இதே நிலைமைதான் மாநிலங்களவையிலும். இந்த அறிவிக்கை மற்றும் மசோதாக்களை அச்சிடுதல், கம்பி அணைத்தல், கட்டுதல் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளோ பல கோடி ரூபாய்.
     என்று போகிறது தலையங்கம்.

ஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி...

தமிழ் மரபில் சிறுவர்களுக்குக் கதை சொல்லும்போது,   “ஏழு கடல் தாண்டி… ஏழு மலை தாண்டி... ஒரு ராட்சஷன் இருந்தானாம்என்று அந்தக் கதை தொடங்கும்போதே கடலை மலையை முன்பின் பார்த்திராத சிறுவர்களின் கண்களில் கற்பனை உலகம் விரிந்து நிற்கும்.. கண்கள் ஒளிரும்!

புறக்கும் கம்பளங்கள் கதைகளில் வந்தபோதே பறக்கும் தட்டுகள் நம் காவியக் கற்பனைகளில் வந்துகொண்டுதான் இருந்தன.. பழந்தமிழில்,சிலப்பதிகாரத்தில்சிந்தாமணியில்  
கம்ப ராமாயணத்தில் இதுபோலும் எந்திரங்கள் தமிழர்களின் எதார்த்தக் கற்பனையை வளர்த்துக் கொண்டேதான் வந்தன.

இதன் தொடர்ச்சியாக வந்த பாரதி, ‘வானை யளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று ஆசைப்பட்ட போது அதுவும் அழகிய கற்பனையாகவே பார்க்கப்பட்டது. பாரதி பாடி அறுபதே ஆண்டுகளில் மனிதன் நிலவில் கால் வைத்துவிட்டான்.  ‘சந்திரனைத் தொட்டதின்று மனித சக்தி’ என்று இதனைப்
பாடி மகிழ்ந்தான் பட்டுக்கோட்டை.

ஆனால் இன்று இவ்வளவு அறிவியல் முன்னேறியும் போலிச் சாமியார் கூடாரங்களில் கூட்டம் குறையவில்லையே! எப்படிதமிழர்களின் அறிவியல் மனோபாவம் இடையறுந்து போனது எப்படிஏன்

கடம்பவனம் அழைக்கிறது!


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமாக 1975இல் மதுரை திடீர் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் பாசறையில் பிறந்த தமுஎகச தனது நாற்பதாண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்து, முன்னிலும் இளமையுடனும் துடிப்புடனும் படைப்புமன எழுச்சியுடனும் தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

செருப்பைக் கழுவுங்கள்


                    உங்கள் செருப்பைக் கழுவுங்கள்

                                      மாதம் ஒருமுறை.

                                      வயதாக ஆக,

                                      வாரம் ஒருமுறையாவது.


                                      ஆள்வைத்துக் கழுவினால்

                                      அழுக்கும் சிரிக்கும்

                                      அவரவரே கழுவுவது அவசியம்.


                                      அப்புறம்...

                                      மறுபுறம் கழுவுவது

                                      மகத்துவமாகும்.


கவிதைப் பயிலரங்கம்

 ஒருசுங்கச் சாவடிக்குக் கடத்தல் பற்றித் தகவல் வந்துச்சாம். வந்தவண்டிகளை யெல்லாம் நிறுத்தி நிறுத்திச் சோதனை செஞ்சும் ஒன்னும் கிடைக்கலியாம். கடைசியில பாத்தா.. கடத்தப்பட்டதே அந்த வண்டிகள்தானாம்! அதுமாதிரி... கணினிப் பயிற்சி பற்றியே எல்லாம் பேசுறீங்களே? கவிதைப் பயிற்சி தரவேணாமா? எனும் கேள்விக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம் - நா.மு.        

சிவகங்கை மன்னர்துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பாக பாரதி விழா கொண்டாடப் பட்டது. காலை 10.00 மணி யளவில் மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன்  விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மெ. பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.

   திருமதி தமிழரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு  நிகழ்ச்சி புகழ் திரு தேவகோட்டை ராமநாதன் அவர்கள் பாரதியின் படைப்புகள் குறித்துப் பேசினார்.  திருமதி மலர்க்கொடி அவர்கள் நன்றியுரையாற்ற காலை நிகழ்வு நிறைவுபெற்றது.

     மதியம் தமிழாய்வுத் துறையின் இரண்டாம் சுழற்சி மாணவர்கள் பங்குபெற இரண்டாம் நிகழ்ச்சி தொடங்கியது. முனைவர் அ.பாண்டி அவர்கள் வரவேற்புரையாற்ற மீளவும் திரு தேவகோட்டை இராமநாதன் அவர்கள் பாரதியும் மற்ற கவிஞர்கள் குறித்தும் அவர்களைப் பாரதியோடு ஒப்பிட்டும் பேசினார்.

கவிதைப் பயிலரங்கம்
  கவிதைப் பயிலரங்கம் திரு புதுக்கோட்டை நா.முத்துநிலவன் அவர்களால் தமிழாய்வுத் துறையில் நடத்தப் பெற்றது. இதற்குப் பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
  காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில்  கவிஞர் முத்துநிலவன் கவிதைகள் குறித்தும், எவை கவிதையாகும், எவை ஆகாது என்பது குறித்தும் பேசினார்.
  
இதன்பின் 

மாணவர்களுக்குத் தரப்பட்ட 
சில தலைப்புகள் - 

(1)மழை, 
(2)பெண்பாடும்-பண்பாடும், 
(3)ஏழாம் அறிவு 

  இதனுள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுச் சிறப்புடன் கவிதை வரைந்தனர். அக்கவிதைகளில் சில பின்வருமாறு....

மழையே மழையே போ!போ!

'மழை-

வந்தும் கெடுக்கும்,

சிலநேரம்

வராமலும் கெடுக்கும்-

ஊருக்குப் போன

மனைவியைப்போல“

என்று கிண்டலாக எழுதுவார் எங்கள் தங்கம் மூர்த்தி

 அப்படித்தான் ஆகிவிட்டது இப்போது பெய்த பெருமழையால்....

தொலைக்காட்சியில் பார்க்கும்போதே பகீர் என்கிறதே! நேரில்

பார்த்த, அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும்....?!!?

வெள்ளக்காடான சென்னை!


சென்னை சத்ய பாமா பல்கலைக் கழக வாயிலில் வெள்ளம்
படகில் மீட்கப்படும் கல்லூரி விடுதி மாணவியர்
----------------------------------------------------- 

கடந்த 5ஆண்டுகளாக இல்லாத மழை 

சென்னையை வெள்ளக்காடாக்கியிருக்கிறது.

படகில் மீட்கப்படும் பரிதாப மக்கள்

புழல்ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, செங்குன்றம் ஏரிகள் எல்லாம் நிரம்பி அவையும் உடைந்து(?) பேரழிவை ஏற்படுத்தும் அச்சத்தை இப்போதே உணர்ந்து உரிய நடவடிக்கைகளை அரசுஉடனடியாகச் செய்யவேண்டும்.

 

என் ஆசைகளை நிறைவேற்ற, கடவுளால் முடியாது!

1.     என்பேத்தி “செம்மொழி“யை, என்பேரன்களைப் பார்க்க, என்அப்பா வரவேண்டும்.

2.     நட்பை உறவை நானும், என்னை அவர்களும் புரிந்து செயல்பட வேண்டும்.

3.     சாதி போலும் ஏற்றத்தாழ்வுச் சொற்கள் பொருளற்றதாக வேண்டும்.

4.     “தமிழ்எனும் சொல்லையே பயன்படுத்தாத வள்ளுவரைப் பார்க்க வேண்டும்.

5.     நினைப்பதை எழுதித்தரும் கணினி மென்பொருள் வேண்டும்.

6.     பெண்-ஆண் சமத்துவம் வீடுமுதல் உலகமுழுதும் நடைமுறையாக வேண்டும்.

7.     அன்பை அறிவோடு தரும் கல்வி, மாணவர் விரும்பும்படி வேண்டும்.

8.     கடவுளைப் படைத்தவன் மனிதன்தான் என்பதை மனிதர் உணர வேண்டும்.

9. இந்தியர் அனைவரும் இந்தியப் பொருளுக்கே முன்னுரிமை தரவேண்டும்.

10.சக்தி-திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற வசதிஎனும் சமூகம் வேண்டும்


கடைசியாக எனது சுயநல ஆசை ஒன்றும் உள்ளது-

“கவிதையின் கதை“ (1,200பக்க தமிழ்க்கவிதை வரலாறு) நூலை 

எழுதி வெளியிடும் நாள்வரை நான் உயிரோடு இருக்க வேண்டும். 

இத்தொடரைத் தொடங்கிய 

நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும், 

என்பால் கொண்ட அன்பால் என்னை 

இதன்பால் இழுத்துவிட்ட 

கவித்தங்கையர் 

மு.கீதா, மைதிலிக்கு 

எனது அன்பு கலந்த நன்றியும் வணக்கமும். 

------------------------ 

சொந்தமா கார் வச்சிருக்கிறது தப்பாய்யா?

இப்பல்லாம் சொந்த வீடு இருக்கோ இல்லியோ, சொந்தமா கார் வாங்கி வாடகைக்கு இடம்பிடிச்சி நிப்பாட்டி யிருக்கிறவங்க அதிகமாயிட்டாங்க. எல்லா ஊர்லயும் போக்குவரத்து நிலையம் அல்லாத, ஊருக்குள்ளேயே மாதவாடகை கார்-பார்க்கிங் பெருகியிருப்பதே சாட்சி!
அதே மாதிரி கணவன்-மனைவி இருவருமே வேலைபார்த்தால் இப்ப கார் என்பது ஆடம்பரமில்லை, அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. (4,5டிக்கட்ட ஏத்திகிட்டு?)
இவ்வளவுக்கும் மேல, 35ஆண்டுகளாக ஒரு நல்ல வேலைபாத்து,  40வருசமா தமிழ்நாடு முழுசுமில்லாம வெளிநாடுகளுக்கும் போயி,  இலக்கியம்(?)பேசி, அலஞ்சி திரிஞ்சு பணிஓய்வுக்குப் பிறகு.. அதுவும்
பாதி வங்கிக் கடன்வாங்கி நான் வாங்கினேன் ஒரு காரு! - இப்ப பரிதாபமா அது என்னைப் பாக்குற பார்வையப் பாரு!
இரு கண்ணு ! நீ ஒன்னும் எந்தத் தப்புப் பண்ணல்ல..இவிங்க பண்ற தப்புக்கு நீ காரணமில்ல.. என் கண்ணுல்ல?

சாதனை படைத்த இவரது பிரச்சினை என்ன தெரியுமா?

“குடும்பத்துல என்னோட பிரச்சினைகளைப் புரிஞ்சிக்கல..அப்பறம் நானே வீட்ட விட்டு வெளியில வந்து “என்னோட கம்யூனிட்டி“யோட சேர்ந்து என்னோட லைஃப நா தேடிக்கிட்டேன்“ என்று சொல்லும் இவர் யார்? 

இவர் அண்மையில் இந்தியாவிலேயே முதலாவதாக............வந்திருப்பவர் என்று சொன்னால் ஒருவேளை உங்களுக்குத் தெரியலாம் –நீங்கள் தொடர்நது செய்தித்தாள் படிப்பவராக, செய்தி ஆர்வலராக இருந்தால்...

இதோ அவரே சொல்வதைக் கவனியுங்கள்..
அது என்ன பிரச்சினை?
அது என்ன கம்யூனிட்டி?
தொடர்ந்து படியுங்கள்!
காணொளியைப் பாருங்கள்!
முதலில் அதிர்ந்தும் பிறகு மகிழ்ந்தும் போவீர்கள்..

வெளிநாட்டு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

புதுகை வலைப் பதிவர் திருவிழா-2015  சிறப்பாக நடந்ததில், நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பதிவுகளுடன் அங்கிருந்தே செல்பேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய நண்பர்களையும் மறக்க முடியுமா என்ன?!

ஆனால், அத்தகைய நண்பர்கள் விழாவில் வெளியிடப்பட்ட தமிழ் வலைப்பதிவர்-கையேடு 
நூலை இன்னும் பார்க்கவில்லையே என்பது அவர்களைப் போலவே எங்கள் குழுவிற்கும் வருத்தமாகவே உள்ளது.

அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, பின்வரும் நமது நண்பர்கள் தொடர்பில் வந்தார்கள். நானும் அவர்கள் கருத்துகளைக் கேட்டேன். அவர்களும் தெரிவித்தார்கள்...அதனால்...

கோவன் பாடல் – காணொளிப் பதிவு

 பாடகர் கோவன் அவர்கள்
மக்கள் கலை இலக்கிய கழகம், திருச்சி
பாடல் காணொளிப் பதிவைத் தனது தளத்தில் வெளியிட்ட விடுதலை வில்வம் அவர்களுக்கு நன்றி. அவரது தளத்திலேயே சென்று பார்த்துப் பின்னூட்டமிட நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்

பதிவர் விழா செய்தித் தொகுப்பு -நன்றி தீக்கதிர் நாளிதழ்

எழுத்தாளர் மயிலை பாலு
பொறுப்பாசிரியர், தீக்கதிர்  நாளிதழ் சென்னை 
இணையம், வலைப்பூ, முகநூல் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பம் தமிழுக்கு உருவாக்கித் தந்துள்ள சொற்கள். தமிழின் சீரிளமைத்திறன் கண்டுவியக்கவைக்கும் இணைய எழுத்தாளர்கள் இணைந்துகொண்டாடிய வலைப்பதிவர்கள் திருவிழா அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

வலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை

வணக்கம். வலைப்பதிவர்விழாவின் வரவுசெலவு அறிக்கையை, நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதா தயாரித்து விழாக்குழுவின் சார்பாக வெளியிட்டுள்ளார். அதனை இங்கு நானும் பகிர்கிறேன். அவரது உழைப்பும், ஈடுபாடும் விழா வெற்றிக்கு அடிப்படையாக நின்றதை அனைவரும் அறிவர்.

விழாவில் நன்றியுரை -
நிதிப்பொறுப்பாளர் மு.கீதா
--------------------------------------------------------------
விழாக்குழுவினர் அனைவரும் போட்டிபோட்டு உழைத்தாலும், இந்த விழாவின் வெற்றி முகத்திற்கு இரண்டு கண்கள் உண்டெனில் அவை இரண்டும்  நிதிப்பொறுப்பாளர் மு.கீதா, உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமி இருவருமே ஆவர்.  இவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.