இணையத் தமிழ்ப்பயிற்சி - படங்கள்-(1)

நடத்திய எங்கள் “கணினித் தமிழ்ச்சங்க” 
நண்பர்களே வியந்து போனோம்!
இணையத் தமிழ்ப்பயிற்சியில் இத்தனை ஆர்வமா?

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் –2016 - நிகழ்ச்சி நிரல்

18-12-2016 ஞாயிறு அன்று  புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ் இதோ-

வருவோர் கவனத்திற்கு -

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

புதுக்கோட்டை - கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்
18-12-2016 ஞாயிறு 
(காலை9மணிமுதல்-மாலை5மணிவரை)
அனுமதி இலவசம், அனைவரும் வரலாம்
பயிற்சி நிகழும் இடம்
Mount Zion College of Engineering and Technology
Lena Vilakku, Pilivalam P.O, Thirumayam Tk.,
Pudukkottai Dt - 622507, Tamil Nadu, India
 ----------------------------------- 

1.      தமிழ் வலைப்பக்கம் தொடங்குவதற்கான பயிற்சி
(உருவாக்கம் முதல் விரிவாக்கம் வரை)  -
2.      விக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவதற்கான பயிற்சி
(எப்படி எழுதுவது, எதை எழுதக்கூடாது)
3.      யூட்யூப்-இல் (ஒலி-ஒளி) ஏற்றுவதற்கான பயிற்சி
(வலைப்பக்கத்தில் யூட்யூப் இணைப்பது உட்பட)
4.      செல்பேசியில் வலைப்பக்கம் ஏற்ற, படிக்க, (ஆப்ஸ்)பயிற்சி
                           மற்றும்
பிழை திருத்திகளைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்,
மின்னூலாக்கும் ஆலோசனைக் குறிப்புகள்,
காண்செவி(வாட்ஸாப்)இல் வலைப்படைப்பைப் படிக்கவும் பதிவேற்றவுமான குறிப்புகள்
பொத்தான்களின் வழி விரைந்த கணினிப்பணிக்கான பயிற்சி (USAGES OF SHORT CUT KEYS IN COMPUTERS)
தலைமை தாங்கித் தொடங்கி வைக்க,
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச் சங்க நிறுவுநரும்
தற்போதைய கோவை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலருமான
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
இசைந்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2016


புத்தகக் காதலர்கள் வருக!
வாராது போல் வந்த மாமணி
புதுக்கோட்டை மக்களின்
நெடுநாள் கனவு!
இப்போது அவசரமாக நிறைவேறுகிறது!
இதுவும்
கவிஞர் தங்கம் மூர்த்தி
விழாக்குழுத் தலைவர்
என்பதால் மேலும்  சிறப்படைகிறது
----------------------------------
- முக்கியமான கூடுதல்செய்தி -
புதுக்கோட்டை மாவட்டப் படைப்பாளிகள்
என்றொரு அரங்கை (ஸ்டால்) வாங்கியிருக்கிறோம்

வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!

20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்
 “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த
ஆலோசனைக் கூட்டம்

---------------------------------------------------------------------------












புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா நடந்து முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு, மாநிலம் தழுவிய விழாவை நடத்த வேறெந்த மாவட்டத்தினரும் --இன்றுவரை-- முன்வரவில்லை.
  

மை வச்சதுக்குப் பதிலா மருதாணி வச்சிருக்கலாம்! (வாசகர் மீம்ஸ்)

மை வைக்கிறதுக்கு பதிலா 
மருதாணி வெச்சாலாவது 
வரிசைல நின்னு காய வைச்சிடலாம்... 
மோடி ஜி 
உங்களுக்கு Creativity பத்தல....
-ஆர்த்தி ரவிசங்கர்


ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் -
ரிசர்வ் வங்கி # அது ஏடிஎம்- பணத்தை வச்சுட்டு சொல்லணும்....
எப்ப பாரு எதாது பேசிட்டு
- கமல் காம்



இருபது லட்சம்பேர் பார்த்த குறும்படம்!

காதல்கதைதான்
என்றாலும் இன்றைய இளைய இணையரின் ஈகோ வை மையப்படுத்தி அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள் குழுவினர் (20நிமிடம்) 

திரைமொழியும் இசையும், தொகுப்பும் பட்டுக் கத்தரித்த மாதிரி...நடிப்பும் மிக இயல்பு! 
வாழ்த்துகள் சொல்லி என் வலைப்பக்கத்தில் 
பகிர்கிறேன் நன்றி

இளமையான இனிய கதையை, படமாக்கிய குழுவினர் அனைவர்க்கும் – வாழ்த்துகள் 
முக்கியமாக இயக்குநர் –சீனிவாசஸ் அவர்களுக்கு.
நாம் எதிர்பார்க்கும் காட்சிகளைப் புரிந்து கொண்டு, அதைத்தாண்டித்தாண்டி யோசித்து வைத்த புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது!

நீங்களே பாருங்களேன் – 

இணைப்பிற்குச் செல்ல -

(கீழே பார்வையாளர் எண்ணிக்கையைப் பாருங்கள்,
 21லட்சத்தைத் தாண்டி விட்டது...)

(முதல்காட்சி மட்டும்தான். . .
 பிறந்தநாளை இரண்டுபேர் மட்டுமே கொண்டாடுகிறார்கள்?

நண்பர்கள் எல்லாம் லீவா நண்பா?)

தீபாவளியன்று ஒரு வைரத்தைத் தீயில் இட்டோம்!

------------------------------------------------------- 
எஸ்.ரா.விடம் நினைவுப் பரிசு பெறும்
விழாக்குழு ஆசிரியர்
சி.குருநாதசுந்தரம்

ஆசிரியர்தான், ஆனால் சாதாரண ஆசிரியரல்ல! தமிழாசிரியர்கள் மட்டுமின்றி அனைத்துப் பாட ஆசிரியர்களும் விரும்பும்  வண்ணம் “பவர் பாயிண்ட்”வழி நடத்தும் ஆசிரியர்களின் ஆசிரியர்!

வலைப்பதிவர் இணையப்பயிற்சிமுகாமை இருமுறை நடத்திய அமைப்பாளர்களில் முக்கியமானவர்!
பார்க்க, படங்கள் மற்றும் செய்திகள் -
இடமிருந்து.. மது கஸ்தூரி, சி.குருநாதசுந்தரம், நான்,
முனைவர் நா.அருள்முருகன், ராசி.பன்னீர்செல்வன்,மகா.சுந்தர்,அ.பாண்டியன்,
சகோதரிகள் இரா.ஜெயா, மு.கீதா
பார்க்க -
   
RMSA (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட) ஆசிரியப் பயிற்றுநர்! மாநிலக் கருத்தாளர்களில் முக்கியமான தமிழ்ப்பாடப் பயிற்சியாளர்!

ஆசிரியர்கள் கணினிவழி கற்பிக்கும் பயிற்சி பெறத் தூண்டி, முன்னோடிப் பயிற்றுநர்!

இதுதான் “மோடி வித்தை”யா மிஸ்டர் மோடி? (ரூ.500, 1000 செல்லாதாமே?)

வர வர இந்தியாவின் பிரதமர் மோடிஜி, ”துக்ளக் ஆட்சி“யை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்.. அவர்தான் திடீரென்று “நாணயங்கள் எல்லாம் இனி தோலில் வெளியிடப்படும்.. முந்திய அரசாணைகள் செல்லாது” என்பதுபோல திடீர் அறிவிப்புகளை வெளியிடுவாராம்!
நமது இன்றைய பாரதப் பிரதமரும் இரவு 08-11-2016அன்று இரவு 9மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி, “இன்றிரவு 12மணிமுதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது” என்று அறிவித்து, நாடு முழுவதும் பரபரப்பை நிகழ்த்தியிருக்கிறார்! ஏழை பாழைகள் நாயாய், பேயாய் அலைகிறார்கள்!
இதனால், “கள்ள நோட்டுப் புழக்கம் அறவே ஒழியும். கணக்கில் வராத ரூபாய்கள் மதிப்பிழக்கும், ஊழல் ஒழியும்” என்று விளக்கம் தருகிறார்கள்!
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, சில கேள்விகளை முன்வைக்கிறேன்-

TNPSC குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?

எனது மாணவரின் வற்புறுத்தலின் காரணமாக, இந்தத் தேர்வுக்குத் தமிழ்ப் பாட ஆசிரியனாக, நானும் ஒருவாரம் வகுப்பெடுத்த அனுபவத்தோடு, மிகவும் ஒத்துப் போவதால் பாடசாலை இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை அப்படியே இங்குத் தருகிறேன்- 
--நா.முத்துநிலவன்
இனி அந்தக் கட்டுரை -

தீபாவளிப் பட்டிமன்றம் -2016-காணொலி இணைப்புடன்



தீபாவளி அன்று (29-10-2016) 
காலை 9மணிக்கு,
கலைஞர் தொலைக்காட்சி
-----------------------------------------------------
நடுவர்
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
தலைப்பு
பண்டிகையும், திருவிழாக்களும்
ஆடம்பரமே!                அவசியமே!
நா.முத்துநிலவன்       சிவக்குமார்
நெல்லை புஷ்பராணி      தேனி தமிழ்ச்செல்வி
வேலூர் தணிகைவேல்    கோவை தனபால்
(இந்த வரிசையில்தான் பேசியிருக்கிறோம்)
------------------------------------ 
என் மகன் அ.மு.நெருடா, 
இதனைப் பதிவுசெய்து 
யூட்யூப் இணைப்பைத் தந்திருக்கிறார்.

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-
நா.முத்துநிலவன் பேச்சு 
(வெட்டியது போக… 5 நிமிடப் பேச்சு மட்டும் உள்ளது) 

பட்டிமன்ற நிகழ்ச்சி முழுவதும் பார்க்க  
https://www.youtube.com/watch?v=FSPzThUugqw

நடிகர் சிவகுமாருக்கு 75வயது! வாழ்க்கையே ஒரு செய்தி!

திரு சிவகுமார், குடும்பத்தினருடன்
----------
அன்றைய நிகழ்வால் எனக்குத் தேதி மறக்கவில்லை!
அந்த நாள் 18-05-2010 மாலை...                                 நானும் என் துணைவியாரும் புதுக்கோட்டை வீதியில் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எனது செல்பேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. நான் எனது வண்டியின் மிதவேகத்தை இன்னும் குறைத்து, செல்பேசியை எடுத்து என் மனைவியிடம் தந்து, “யாரென்று கேள்பா..ஏதும் அவசரம்னா சொல்லு, இல்லன்னா பத்து நிமிடம் கழித்துப் பேசச்சொல்லு” என்று சொல்கிறேன். அவரும் பேசிவிட்டு,  “யாரோ சிவக்குமாராம். சென்னையிலிருந்து பேசினார். பிறகு கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னார்.

நானும் மற்ற வேலைகளில் மறந்துவிட்டேன்.
சரியாகப் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இப்போது நான் எடுத்து “வணக்கம் நான் முத்து நிலவன். யாரு பேசுறதுங்க?” என, “வணக்கம் முத்துநிலவன், நான் சிவக்குமார் பேசுகிறேன்” என, எனக்குக் குரல் பரிச்சயமானதாகவும் ஆனால் யாரென்று பிடிபடாத தாகவும் இருக்க, “எங்கிருந்து பேசுறீங்கய்யா?“ என்று கேட்டவுடன், சற்றும் குரல் மாறாத இயல்பான தன்மையுடன்  “சென்னையிலிருந்து நடிகர் சிவக்குமார் பேசுறேன்..” என, நான் பரபரப்பானேன்..“அடடே அய்யா வணக்கங்க! சொல்லுங்கய்யா” என..அவர் இயல்பாக “ஜனசக்தி பத்திரிகையில “செம்மொழி மாநாடும் கம்பனும்” எனும் உங்க கட்டுரையைப் படிச்சேன். நல்லா எழுதியிருக்கிங்க... “கம்பன் என் காதலன்” னு 3மணிநேரம் கம்பன் பத்தி நா பேசின பேச்சைப் பார்த்திருக்கீங்களா?“ என்று கேட்க, “ஆமாங்க விஜய் டி.வி.யில ஒளிபரப்பாச்சுல்ல.. ஆனா முழுசாப் பாக்க முடியல… கேட்ட வரைக்கும் எந்தக் குறிப்பும் இல்லாம, கம்பராமாயணப் பாடலுடன் அழகாப் பேசியிருந்தீங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “உங்க முகவரிய எனக்கு மெஸேஜ் பண்ணுங்க அனுப்பறேன் பாருங்க பிறகு பேசுகிறேன்” 

பள்ளிப் பாடங்களை மீறிய அறிவுதேவை!


கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
(நன்றி – தினமணி திருச்சிப் பதிப்பு, & புதுகை வரலாறு நாளிதழ்-26-10-2016)
  பள்ளியில் படிக்கும் ஐந்து பாடங்களை மீறியது பொதுஅறிவு! அதுதான் நிலைத்த புகழையும் தரும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
 புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் நடந்த அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் “மாணவர் தனித்திறன் விருதுகள் வழங்கும் விழா”வில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்து நிலவன், மேற்கண்டவாறு பேசினார்.
  மருத்துவர் இராமதாஸ் விழாவிற்குத் தலைமையேற்க, அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார்.

விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்பேசி எண்?

         இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்க செல்பேசி எண்களை, விரைவில் 11 இலக்க எண்களாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
        இந்தியாவில் செல்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 10 இலக்க எண்களைக் கொண்ட எண்ணே அறிமுகம் செய்யப்பட்டது
(அப்போதிருந்த பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டாது என்னும் முடிவின் அடிப்படையில் இருந்திருக்கலாம். ,இந்தியர்கள் இப்படி ஆளுக்கு 4செல்பெசி ஒவ்வொன்றிலும் 4சிம் என்று வாங்கிக் குவிப்பார்கள் என்று யாரும் சொல்லலியே...!)

பிளாஸ்டிக் அரிசி! சீனப் பட்டாசு! செய்திகளின் பின்னணி என்ன?


பிளாஸ்டிக் அரிசியா?
என்ன? கேட்டவுடன் பகீரென்கிறதா?
எனக்கும் 
அப்படித்தான் இருந்தது. 

பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதால் எவ்வளவு ஆபத்துகள் நிகழும்!?

இதைப் பாருங்கள்-

இது உண்மையாக இருக்குமானால் உடனடியாக இதனைத்
தடுக்க வேண்டுமல்லவா?

சன் டி.வி., விஜய் டி.வி.யை சரித்திரம் மன்னிக்காது!

கலர் டிரஸ் போட்டுக் கலக்கும்
கவர்ச்சிப் பேய்!
     (எப்புடீ?)

 படிப்பவர்களை 
வெறும் பார்ப்பவர்களாக மாற்றியது 
தொலைக்காட்சி!
அது குழந்தைளைப் பாதிப்பதைப் பற்றி 
விளக்க வேண்டியதில்லை.

“ரெமோ” -சிவ.கார்த்தியின் அவகீர்த்தி!


வருத்தப் படாத வாலிபக் கதையின்
      வணிகம் தொடரும் அநீதி இது
திருத்தப் படாத சிவ.கார்த்தி பாணி
      தெரிந்தே படரும் வியாதி இது!

“புதிய கல்விக்கொள்கை-2016” எதிர்க்க வேண்டிய அவசியமென்ன?


“வரைவு தேசியக் கல்விக்கொள்கை–2016 சிலஉள்ளீடுகள்” எனும் அறிக்கை http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf  மத்தியஅரசால் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. (தமிழில் 99பக்கம்) இதில் உள்ள பல அம்சங்கள், இன்றைய கல்வியின் மோசமான தன்மைகளை உரத்த குரலில் முழங்கினாலும், இதில் மாற்றம் செய்வதற்கான செயல்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை! மாறாக, வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு அம்சங்களே இந்த வரைவுத் திட்டத்தின் பிற்பகுதியில் விரிவாக உள்ளன! அவை ஆபத்தானவை மட்டுமல்ல! இந்திய முன்னேற்றத்திற்கு எதிரானவை! இதனை எதிர்க்கவும் இவ்வரைவை மாற்றவும்  அவசியமுள்ளது. அவை என்னென்ன என்று பார்ப்போம்

எனது ”முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலின் இரண்டாம் பதிப்பு



முதல்பதிப்புப் படிக்காதவர்களுக்காக, நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்புகள் – (வெளிவந்த விவரம்)


(1)  ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? (கீற்று)

(2)  கல்வி புகட்டுவது சரியா? ( எனது வலைப் பக்கக் கட்டுரை)

(3)  சமச்சீர்க் கல்வி அரசும் ஆசிரியர்களும் (ஜனசக்தி நாளிதழ்)

(4)  சமச்சீர்க் கல்வி -வாராது போல்வந்த மாமணி (ஜனசக்தி)

(5)  விண்ணப்பித்து வாங்குவதா விருது? (தினமணி நாளிதழ்)

(6)  முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! (தினமணி இணையம்)

(7)  தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?(வலைப் பக்கம்)

(8)  தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் (தீக்கதிர் செம்மொழி மாநாட்டு மலர்)

(9)  கல்வியில் ஜனநாயகம், மறுமதிப்பீடு தேவை (தினமணி)

(10)     தமிழாசிரியர் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்(வலை)

(11)     9,11ஆம் வகுப்புகள் தேவையில்லையா? (சிந்தனையாளன் மலர்)

(12)     தமிழில் அதிகத் தோல்விக்குக் காரணம் என்ன? (வலை)

(13)     பழங்கதைகள் மறுவாசிப்பு அவசியம் (வலை)

(14)     எனது ஆசிரியப் பணியில் சில நல்ல நாள்கள் (வலை)

(15)     எனக்கு என் மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது (வலை)

(16)     பாடத்திட்டத்தில் ஊடகம் (தினமணி)

(17)     தமிழ்வழிக் கல்வியில் இருமுனைத் தவறுகள் (என் மகள் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)

(18)     தமிழ்வழிக் கல்விக்குத் தடையென்ன? (என் மகன் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)
-------------------------------------------------------------------------------- 

இரண்டாம் பதிப்பின் பின்னுரையாக என்னுரை -
எனது நூல் தந்த மகிழ்ச்சியும், கவலையும்!