அச்சமில்லாத இளம் எழுத்தாளர் ரானா அய்யூப்!


 'குஜராத் வழிகாட்டுகிறது என்று முழங்கி, இந்தியா முழுவதும் இப்போது வழிகாட்டிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்தில் நடந்த திட்டமிட்ட அரசியல் கொலை, கலவரங்களை மூடி மறைத்து விட்டார்கள்' என்று சொல்லிச் சொல்லி ஓய்ந்துபோனார்கள் பலரும்.

பிரதம வெளிச்சம் இவர்களின் கண்களைக் 
கூசச் செய்துவிட்டது என்பது, இப்போது தெரிகிறது!

இதோ எவ்வளவு பெரிய குஜராத் குகைகளை இவர் காட்டுகிறார்! 

அச்சமில்லாத இளம்பெண் எழுத்தாளர் ஒருவர், இவற்றில் இறங்கிக் குடைந்து எடுத்து, ரத்தமும் சதையுமான நூலாகவும் கொண்டுவந்து வியப்பூட்டுகிறார். இல்லை இல்லை மோடிக்கே பேதி கொடுக்கிறார்.

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும் முதல்வர் மோடியின் வலது கரமாகவும் இருந்த அமித்ஷா கைதுசெய்யப் படக் காரணமான எழுத்து இவருடையது! 


இவர்..அப்போதே பிரபலமாகத்தான் இருந்தார்! 
இவரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
இவரது எழுத்து படிக்கப்பட வேண்டியது.
இவரது நூலைப் படிக்கும் முன் 
இவரைப் பற்றிய விவரத்தை அறியுங்கள் –


படம், நேர்காணலுக்கு நன்றி –
ஜூனியர் விகடன் - 28-8-2016 

-------------------------------------------------------------------------------------------------- 
நூல் 
“குஜராத் கோப்புகள்”
(மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்)
எழுதியவர் - ரானா அயூப்
பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
இந்தியன் வங்கியில் ரூ.200செலுத்தி, உங்கள் முகவரியுடன் பின்வரும் எண்ணுக்குப் பேசினால் புத்தகம் உங்கள்வீடு தேடிவரும்
இந்தியன் வங்கிக் கணக்கு எண்-701071066 ஆழ்வார்ப்பேட்டை பாரதிபுத்தகாலயம் பெயரில் செலுத்தவேண்டும்.
தொலை பேசி - 044 24332924
----------------------------------------

1 கருத்து:

  1. போற்றுதலுக்கு உரியவர்
    நூலினை அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு