வகுப்பறையில் ஆசிரியர் குத்திக் கொலை ! என்று தணியும் இந்தக் கொலைவெறி?


புதுடெல்லி நங்லாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், இந்தி ஆசிரியர் முகேஷ் குமார்

28-9-16 மாலை 5 மணியவில் வகுப்பறையில் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று ஆசிரியர் முகேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதிய வருகை பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதியில்லை என்றார் ஆசிரியர்

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், நண்பனுக்கு ஆதரவாக மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஆசிரியரைக் குத்தினார். அதைத்தொடர்ந்து வாக்குவாதம் செய்த மாணவரும் ஆசிரியரை கத்தியால் குத்தினார். சகமாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து 3 முறை ஆசிரியரை சரமாரியாக குத்திய மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் முகேஷ் குமாரை உடனடியாக பள்ளி அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் முகேஷ் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியரை கத்தியால் குத்திய 2 மாணவர்களையும் போலீசார் சில மணி நேரத்திலேயே கைது செய்தனர். இறந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் கொலைச் செய்திகளும், மாணவர் கைதுச் செய்திகளும் ஏற்கெனவே 20102இல் சென்னையில் நடந்த “ஆசிரியர் உமா மகேஸ்வரி கொலை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் இர்ஃபான் கைது” என்னும் செய்தியின் மறுபதிப்புத் தான்!
தமிழக அரசோ, டெல்லி அரசோ, மத்திய அரசோ கூட இதுபற்றிச் சிந்தித்து, இந்தக் கேடுகெட்ட தேர்வுமுறையை, கல்விமுறையை மாற்றாத வரை ஆசிரியர்கள் கொலை வழக்கமான செய்தியாகவே பார்க்கப்படும்! 
-----------------------------------------------------
இதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும்!

ஆசிரியரால் மாணவர் தற்கொலை!

ஆசிரியர் பாலியல் கொடுமையால் மாணவி தற்கொலை!

சாதிகள் ஒழியுமா?



பெரியாரின் சிந்தனையும்!
அண்ணாவின் செயல்பாடும்!
பெரியார்-அண்ணா விழாவில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
(நன்றி - தினமணி நாளிதழ், புதுகை வரலாறு நாளிதழ்-21-9-2016)

புதுக்கோட்டை, செப்.21 புதுக்கோட்டை அருகிலுள்ள சத்தியமங்கலம் கீரை தமிழ்ச்செல்வன் கல்வியியல்கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரியில் நடந்த பெரியார்-அண்ணா பிறந்தநாள் விழாவில், சிறப்புரையாற்றிய கவிஞர்நா.முத்துநிலவன்  “தந்தை பெரியாரின் சிந்தனைகளைத் தனயனாகிய அண்ணா தமிழக முதல்வராகிச் செயல்படுத்தினார்” என்று  புகழாரம் சூட்டினார்.
கீரை தமிழ்ச்செல்வன் கல்லூரிக்கலையரங்கில் நடந்த பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை தமிழ்ராஜா தலைமை ஏற்றார். கல்வி நிறுவனங்களின் செயலர் பீட்டர் முன்னிலை வகித்துப் பேசினார்.
கல்வியியல் கல்லூரி முதல்வர் சி.கேசவன், செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.தெரஸ், புதுக்கோட்டைக் கவிஞர் மீரா.செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியர் பி.தீபா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார்.

விரதம் னா இப்படி இருக்கணும்!


கவிஞர் மீரா.செல்வக்குமார்.
நண்பரும், வலைப்பதிவரும், விருதுபெற்ற கவிஞருமான 
புதுகை மீரா.செல்வக்குமாரின் பதிவுபடித்து, 
அனைவரும் வாரம் ஒருநாள் விரதம் இருக்க 
வருக! வருக!

பார்க்க, படிக்க, விரதம் இருக்க 
அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் -
 


ஷாருக் கானுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?!?!

 “பெரியகூடை”யோடு 
காய்கறி விற்கிறார் ஷாருக்கான்!

இந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்!
பார்க்காமல் இருக்க முடியாத அளவுக்கு,
அனைத்துத் தொலைக்காட்சிகளிலும்
வந்துகொண்டிருக்கிறது இந்த விளம்பரம்!

(பெண்களைக் கவர ஷாருக், ஆண்களைக் கவர இளம்பெண்!
அடடா.. என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா…!)

ஷாருக்கான் வாங்குகிறார்… அப்ப நீங்க?
என்று கேட்கிறது இன்னொரு விளம்பரம்!

பெங்களுரு – இன்னா செய்தாரை ஒறுத்தல்…?

'பெங்களுர் பற்றி எரிகிறது ! 
தமிழா! கன்னடரை அடி !' 
இதுதான் பெரும்பாலான காண்செவி(whatsaap)குழுக்களில் இப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி!
இதுபோலும் செய்திகள் உணர்ச்சிவசப்படுத்தவே செய்யும்..

நானும் நண்பர்களும் “அப்படி இல்லை. அங்கு ஒருசிலரும் இங்குச் சில ஊடகர்களும் “ஊதிப்பெருக்கும்” செய்தியிது” என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். எனினும் இன்னும் பகிரத் தேவையுள்ளது!

முதல்கோணல் முற்றும் கோணல் அல்ல!அல்ல!!அல்ல!!!

நமது பழமொழிகள், அனுபவத்தின் சாரம்தான். சந்தேகமில்லை. 
ஆனால், சில தவறான பழமொழிகளும் நம்மிடையே உள்ளன. 

எது சரி எது தவறு என்று பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளத் தெரியா விட்டால் நல்ல சில முயற்சிகளும் தவறாக முடிந்துவிடக் கூடும்.

இப்படித்தான், “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்றொரு தவறான பழமொழி தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் உள்ளது. First Impression is the Best Impression என்பதுதான் அது!
(ஒரு தமிழ்ப்பட நாயகன் தனுஷ், ஒருபடத்தில் “சிலபேர பார்த்தவுடனே புடிக்கும், சிலபேரைப் பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும்” என்பாரே!)

SRM பச்சமுத்து, Jio அம்பானி பற்றிய பட்டுக்கோட்டையார் பாடல் கேட்க-பார்க்க வருக!

“அறிவிலே தெளிவு” என்று பாரதி பாடியதன் பொருளென்ன?
அறிவு என்பது வெறும் தகவல் அறிவல்ல, அது தரும் சிந்தனை என்பதே பொருளாகும்! 

ஆனால், நம்ம கல்வி முறையில் மெத்தப் படித்த மேதாவிகள் பலரும் “வரவரமாமியா” பழமொழி ஆன காரணம் தெரியும்தானே!

“ஓடிவா ஓடிவா வெறும் 50ரூவா தான்… இந்தத் தகட்டை வாங்கி உன் வீட்டுக் கதவுல கட்டிவச்சிட்டா உன்னைப் பிடிச்ச பீடை ஓடிரும் ஒரே வாரத்துல நீ கோடீஸ்வரன் ஆகிவிடலாம்” என்று மட்டுமல்ல,
“இதக் கேட்டுட்டும் வாங்காமப் போனியின்னா.. இன்னும் ஒரேவாரம் உன் மக ஓடிப்போயிருவா, நீ ரத்தம் கக்கிச் செத்துப் போகப்போறே”
என்றும் சந்தையில் கூப்பாடுபோடும் தகட்டு விற்பனைக்காரன் போல
“ஓடிவா ஓடிவா வெறும் அம்பது ரூபாதான். மூனு மாசத்துக்கு நீ பேச பாக்க கேக்க எல்லாம் ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ” அப்படின்னு ஷாருக்கான் விளம்பரம் பண்ணும் ஜியோ விளம்பரமும் ஒன்றுதான்…!

உலகின் மிகப்பெரிய பெரியார் சிலை!

பெரம்பலூரில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, தனது சொந்தச் செலவில் சுமார் 40லட்சம் ரூபாய் மதிப்பில், அழகிய பெரியார் சிலையோடு பெரியார் பூங்காவையும் அமைத்திருக்கிறார் எனில், அந்த மனிதர் எந்த அளவிற்குப் பெரியாரை நேசிப்பவராக இருக்க வேண்டும்! அவரைப் பார்க்கவே எனக்கு வியப்பானது!

தந்தை பெரியாரைத் தமது சொந்த நலனுக்காகப் பேசுவோரும், பெரியாரை எதிர்த்தே அரசியல் செய்வோரும், இன்னொருபக்கம் வணிகமாகவே பெரியாரியத்தை ஆக்கிவிட்டவர்களும் வாழ்ந்து வரும் இன்றைய சூழலில், இது எனக்குப் பெருமகிழ்வையும், அந்த மாமனிதர்பால் மிகப்பெரிய மரியாதையையும் ஏற்படுத்தியது!