இன்று ஜெயகாந்தன் பிறந்தநாள் - அஞ்சலிக் கட்டுரை


மறக்க 
முடியாத
எழுத்தாளனின்
பிறந்த நாளில்

அவரை
வணங்கி,
ஒரு
மறு 
விமர்சனம்!


---------------------------------------         

ஒரு ஜெயகாந்தனும்
சில  ஜெயகாந்தன்களும் - 
-- நா.முத்து நிலவன் --
----------------------------------------------------------------------------
 மணிவிழாக் கருத்தரங்கம் முடிந்தது.
கார்களின் நெரிசலுக்கிடையே நடந்து போய்க்கொண்டிருந்த முனியம்மாஇரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பிய கங்காவை கவனித்துவிட்டாள்.
 “இன்னாம்மே ! கண்டுக்காத போய்க்கினேகீறியே!” ஹக்காங்
 “அட ! நம்ம முனிம்மா!” வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் கங்கா.
 “சேச்சே ! என்ன முனியம்மா நா பாக்கல.. ஹவ் ஆர்யூசெமினார்க்கு வந்திருந்தியா?
 “வந்திருந்தியாவாமீட்டங்கி நடக்கச்சொல்ல அம்மாநேரமும் ஒரு மூலையில குந்திக்கினு அல்லாத்தியும் பாத்துகினுதான் இர்ந்தோம்…”
 “அட்ட! உன்னோட வேற யாரெல்லாம் வந்திருந்தாங்க” கங்கா கேட்டு முடியவில்லை நொடித்துக்காட்டினாள் முனியம்மா.
 அடடே! அல்லாரும் வரமாட்டமாங்காட்டியும்இந்த மினிம்மா மட்டுமா வந்திருந்தான்னு நென்ச்சிக்கினே அக்கட சூடு! நம்ப சித்தாளுகம்சல, ‘ஒருபுடி சோத்துக்க நாயா அலைஞ்சி லோல்படுற ராசாத்திமாரியம்மாஅந்தா ஓவர் டைமு’ ஏலுமல, ‘ டிரெடிலு வினாயகம்இந்தா பாசஞ்சர் வண்டியில’ வந்து பெரளயத்துல மாட்டிக்கின அம்மாசிக் கெயவன்நம்ம பாடகரு பொணத்தக் கட்டிகினு அயுதானரிக்சாக்கார கவாலிஅம்மாந் தூரம் ஏன்நேத்தக்கி வந்தவ… அந்த ரிசிபத்தினி’ பொன்னம்மா அல்லாந்தா வந்துர்ந்தோம்…”
 கொஞ்சம் தள்ளித்தள்ளிமரத்தடிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த எல்லோரையும் சுட்டிக் காட்டினாள் முனியம்மா. அவர்களோடுமுனியம்மா சொல்லாவிட்டாலும் - நூறு பேர்களில் இருவராக நின்றிருந்த பரந்தாமன்ஆனந்தனையும் பார்த்தாள் கங்கா. ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த தெருவோர தேசியவாதிளைப் பார்க்க சங்கடமாகவு மிருந்தது.
 ‘தே ஆர் ஆல் செய்லிங் இன்த சேம் போட்..ஈவன் டுடே…’ என்று நினைத்துக்கொண்டவள் ‘ சே ! திங்க் பண்ணுவது கூட இங்கிலீஷில்தானா வரவேண்டும்’, என்று தனக்குள் விவாதித்துக்கொண்டே முனியம்மாவி;டம் கேட்டாள்..
ரியலிஎல்லாருமா வந்திருந்தீங்கநா பாக்கலியே. லாஸ்ட் ரோல ஐ வாஸ் சிட்டிங் வித் பிரபுகௌதம் அன் மாலா ரெண்டு மூணு சீட் தள்ளி கல்யாணியும்ரெங்காவும் கூட இருந்தாங்க. அப்பாலமகுடேசம்பிள்ளைமுத்துவேலர்கணபதி சாஸ்திரிகள்சீதாசங்கர சர்மாசாரதா மாமிதங்கம்ஆதி யெல்லாம் கூட வந்திருந்தாளே ! டோன்ட் யூ நோ தெம்?...”
 “ந்தா இந்த டஸ்ஸபுஸ்ஸிஇங்கிலீசெல்லாம் நம்ம கைல வாணாம் தாயீ! நீங்கள்ளாம் வெள்ளையும் சொள்ளையுமா சோபால குந்திகினு இர்ந்தீங்கநாங்க எப்பவும்போல அப்டி ஓரஞ்சாரத்துல ஒண்டிக்கினு எட்டி எட்டி பாத்துகிணு இர்ந்தோம்இன்னா பண்றதுபாயாப்போன மன்சு கேக்லியே?
 அது செரீஅல்லாரும் பேசவுட்டு கடசீல அவுரு வந்துஅது இன்னாதது ஏற்புரையாஆங்அதான்சிங்க மாட்டமா சொம்மா வெளாசித் தள்ளிகினாரேஆமாஅது இன்னாத்துக்கும்மே இப்பப்போயி அல்லாரும் தெகிரியமா இந்தி பட்ச்சிக்கணும்ன்றாரு? ..என்னிய மாரி மினியம்மால்லாம் இன்னிமேல இந்திபட்சி இன்னா ஆவப்போவுது ன்றாரூ…!
 “ஸீ!முனிம்மாஅட்லீஸ்ட் நெக்ஸ்ட்செஞ்சுரியிலாவதுஸீவாட் ஐம் கோயிங் டு சே ஈஸ்…” முனியம்மாவிடமும்  தன் இயல்பில் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டதை உணர்ந்துதனது நாகரிகமற்ற செயலுக்கு உண்மையிலேயே வருந்திநாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திவிட்டாள் கங்கா.
-----------------------------------------------------------------
 போதும்,
 கங்காவும்மற்ற உயிருள்ள பாத்திரங்கள் யாவும்சற்றுநேரம் அப்படியே உறைந்து நிற்கட்டும். நாம்அவர்களைப் படைத்தளித்த நமது அற்புதப் படைப்பாளியோடு சிறிது நேரம்-உரிமையோடு-பேசிவருவோம்.

ஆடை களைந்தனர் தந்தையரே! அம்மண மாயினம் இந்தியரே!!

ஆடை களைந்தனர் தந்தையரே!
      அம்மண மாயினம் இந்தியரே!!
கோடை வெயிலினும் கொள்ளியடா
      கொளுத்திப் போட்டது டெல்லியடா!



எத்தனை எத்தனை போர்முறைகள்!
      இம்மியும் அசையாக் கல்நெஞ்சா?
அத்தனைக் கும்,இனித் தாக்கமெழும்
      அமைதிப் போரின் நோக்கமிதே

புதுக்கோட்டையில் “கக்கூஸ்” ஆவணப்படம் திரையிடல்

இயக்குநர் திவ்யாவுடன் கலந்துரையாட வருக நண்பர்களே!
என்னை அதிர்ச்சியடையச் செய்த ஆவணப்படம் என்று ஏற்கெனவே எனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். குறுகிய காலத்தில் எனது “அதிகமாகப் பார்க்கப்பட்ட பதிவுகள்” பத்தில் எட்டாம் இடம் வந்திருப்பது, எனது செல்வாக்கால் அல்ல, படத்தின் வீச்சு அத்தகையது! பார்க்க – http://valarumkavithai.blogspot.com/2017/02/blog-post_28.html

இந்தப் படத்தை, வரும் 15-04-2017 சனிக்கிழமை மாலை 6மணிக்கு, புதுக்கோட்டை- உசிலங்குளம் “கந்தர்வன் நூலக அரங்”கில் திரையிடுகிறோம்.
அதோடு இயக்குநர் திவ்யாவுடன் ஒரு கலந்துரையாடலும் உண்டு!

மின்னூல்களாக என் நூல்கள் …

(வெளிநாடு வாழ் நண்பர்களுக்கான சிறப்புச் செய்தி) 
.நா.கலை-இலக்கியப் பெருமன்றத்தின் முதற்பரிசை வென்றதோடு,
மதுரைக் காமராசர் பல்கலைக்கழக எம்..தமிழ்வகுப்புக்குசுமார் 15ஆண்டுகள்
 பாடநூலாக  இருந்த என் கவிதைத் தொகுப்பு இது
ஐந்தமிழ் இன்று ஆறாம்தமிழாக வளர்ந்து வரும்போது, நாமும் வளர்ந்தாக வேண்டுமல்லவா? வளர் தமிழுக்கு நம்மையும்  தகவமைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக நமது நூல்களை மின்னூலாக்க உதவியது பெங்களுரு “புஸ்தகா” நிறுவனம்.

மீரா.செல்வக்குமார் கவிதைத் தொகுப்பு - எனது முன்னுரை

கவிஞர் மீரா.செல்வக்குமார்
கவிஞனைக் கண்டுகொண்டேன்!
அண்மையில் வெளிவந்த கவிஞர் மீரா.செல்வக்குமாரின்,
இரண்டாவது நூலான 
“ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்” 
கவிதைத் தொகுப்புக்கான எனது
முன்னுரை – நா.முத்துநிலவன்
ரு பெரும் இயக்கம் நடத்தும்போது, அரியவர் சிலரின் அறிமுகம் கிடைக்கும். அதுவே, அந்தப் பெரிய இயக்கத்தின் ஆகப்பெரிய பலனாகவும் அமைந்துவிடும். இது அறிவொளி இயக்கத்திலும் “ஜேக்டீ”, “ஜாக்சாட்டோ” போலும் அரசு-ஊழியர் ஆசிரியர் இயக்கப் போராட்டங்களின் போதும் நடந்ததை நடத்தியவர் மட்டுமே அறிவோம். தொடர் பலனை ஊரறியும்! 

பெண்கவி இருவர், முன்னுரை இரண்டு – ஓர் ஒப்பீடு!

“இருவேறு உலகத்து இயற்கை”  
(எனது முன்னுரையோடு மற்றொரு முன்னுரையை ஒப்பிட்டு கணையாழி வெளியிட்ட கட்டுரை)
                   எழுதியவர் த.பழமலய்
கவிஞர் த.பழமலய்
அண்மையில் (மே,2003) இளம்பிறையின்முதல் மனுசி’ வெளிவந்திருக்கிறது. 112 பக்கங்கள். பக்கங்கள் பலவற்றிலும் கறுப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படங்கள். வழுவழுப்புத்தாள். விலை ரூ.75.00. இது சென்னை ஸ்நேகா வெளியீடு. சென்னை வர்த்தகர் சங்க அரங்கில் ஏக தடபுடலாக வெளியிடப்பட்டது. கடந்த நான்கைந்து மாதங்களில் கணிசமாக விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கேள்வி. மகிழ்ச்சிக்கு உரிய செய்திதான்.