தமிழக பாஜக தலைவராகிறாரா ரஜினி?

அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்தெரிவித்தார். 

இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? -– எமது போராட்ட விளக்கம்


இந்தியும் தமிழும்... 
தமிழின் வயது யாருக்கும் தெரியாது! ஏனெனில், “இவள் என்றுபிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” 5,000ஆண்டுகளுக்கும் மேலானது என்பதை ஊரறியும், உலகறியும் மொகலாய அரசன் கோரிமுகமது இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்றி, அங்குத் தமது ஆட்சியை நிலைநாட்ட தில்லியை மையமாகக் கொண்டு ஆளத் தொடங்கியபோது உருதுமொழியுடன் பிராகிருதம் கலந்துபேசிய மக்களிடம் உருவான கலப்பு மொழியே இந்தி மொழி. இதன் காலம் கி.பி.850!  

டவுசர் கிழியட்டும்!

தெளிவாகச் சொல்லுங்கள்-
“நீட்“டாகப் போன எங்கள் பிள்ளைகளின்
சட்டையைக் கிழித்த
மோடி அரசின்
“டவுசர்” கிழியும்வரை
போராட்டங்கள் தொடரட்டும்!
----நா.முத்துநிலவன்.
------------------------------------------------- 
செய்தி,படத்துக்கு நன்றி - 
தினமணி நாளிதழ்-08-5-2017

“நீட்”தேர்வு – சமத்துவத்துக்கு சாவுமணி!( NEET EXAM DISPUTE)


அய்யா காமராசர் முதல்வராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரியில் சேரவிரும்பிய சுமார் 100 மாணவர்களின் விண்ணப்பங்கள், முதல்வரின் தனிச் சிபாரிசுக்கு வந்ததாம். 10சீட்டுகள், முதல்வரால் தேர்வு செய்யப்படும் சிறப்பு அனுமதி இடமாகக் கருதி ஏழை மாணவர்க்கு வழங்கப்படுவது வழக்கம்.
பல்வேறு வேலைகளுக்கிடையில் பத்தே நிமிடத்தில் அந்த 10சீட்டுக்குரிய விண்ணப்பங்களைத் தேர்வுசெய்தாராம் காமராசர். இதுகண்ட ஊழியர்கள் “எப்படி இவ்வளவு வேகமாத் தேர்வு செய்தீர்கள்?” என வியந்தார்களாம்.
 “விண்ணப்பத்துல, அப்பா கையெழுத்துப் போடுற இடத்துல கைநாட்டு வச்சிருந்த விண்ணப்பங்களாத் தேடி எடுக்கப் பத்துநிமிசம் போதும்ல ன்னேன்?!” என்று காமராசர் பதில் சொன்னதாகச் சொல்வார்கள்!
அதாவது, “படிக்காத பெற்றோர்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும்” என்று காமராசர் நினைத்திருக்கிறார்!
இது அப்போ!!!!
ஆனால் இப்போ...?

தானடித்த மூப்பாக மத்திய அரசில் நடப்பதென்ன?
“யாருடைய தந்தை, லட்சம்-கோடிகளைக் கொட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும்” என அறிவிக்கவில்லையே தவிர, மாநிலங்களின் கருத்தையும் இதுபற்றிக் கேட்காமல், அப்படித்தான் சட்டம் பேசுகிறது மத்திய மோடி அரசு !
“நீட்” தேர்வு என்றால் என்ன? 

மே-தை மாதமே!

(மே தின வாழ்த்துக் கவிதை)


எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
         
எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருகஎனக்
         
கேட்டெழுந்த போரின் தொடக்கம்             (1)