கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!


கவிஞர் சோலச்சியின்
“கருப்புச்சட்டையும்
கத்திக் கம்புகளும்”
சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை-[_ன்,8 புதுக்கோட்டை அருகிலுள்ள வயலோகம் துர்க்கா அரங்கில் நடைபெற்ற கவிஞர் சோலச்சியின் “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “படித்தவர்கள் வெறும் பார்வையாளராகவே இருந்துவிடாமல், நாட்டில் நடந்துவரும் நல்லனவற்றின் பங்கேற்பா ளராகவும் வரவேண்டும்”என்றார்.

நவகவியின் பாட்டிசைப் பெருவெள்ளம்!




வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாமல், கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும்  அல்லது அவஸ்தைப் படுத்தும் பாடல்கள் சில எல்லாருக்கும் இருக்கும்தானே? அப்படியானவை, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் மட்டுமல்ல! நவகவியின் பாடல்களும்தான் என்பதைக் கம்பீரமாய்ச் சொல்ல வந்திருக்கும் பாடல் தொகுப்பு ”நவகவி1000”!



இலைகள் அழுத ஒரு மழை இரவு,
     எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது
  கண்டேன் ஒரு காட்சி, கண்டெனது
    கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது
இந்த வரிகளை 25வருடமுன்பே முதன்முதலாகக் கரிசல் கிருஷ்ணசாமியின் காந்தக் குரலில் கேட்டபோது ஏற்பட்ட உணர்வு இப்போதும் மாறாதிருக்கிறது!